பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
போருக்குள்
ஒரு போர்

குருகுலப் போராட்டம் என்றவுடனே நம் கண் முன் பாண்டவர்களுக்கும் கவுரவர்களாகிய துரியோதனாதியர்களுக்கும் நடந்த பாரதப் போர் தான் தோன்றும்.

துரியோதனாதியர்க்கும் பாண்டவர்க்கும் நடந்த போர் வெறும் பங்காளிச் சண்டை.

கண்ணன் சூழ்ச்சியால் குருகுலமே அழிந்து போன கதை அது.

நம் தமிழ் நாட்டில் ஒரு குருகுலப் போர் நடந்தது.

1925ஆம் ஆண்டு நடந்த இந்தப் போராட்டம் தமிழ் இனத்தின் வாழ்வா சாவா என்ற அடிப்படை யில் நடந்த போராட்டம்.

இளந் தலைமுறையினர் இந்த வரலாற்றுச் செய்தியை அறிந்திருந்தால் தான், நாம் அடுத் தடுத்து வரும் தலை முறைகளில் மானத்தோடு - மதிப்போடு வாழ முடியும் என்பதால் தான் இந்த நிகழ்ச்சியை நினைவு கூர வேண்டியுள்ளது.