பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போருக்குள் ஒரு போர்

15

ஒரு மருத்துவரிடம் போய்ப் பயிற்சி பெற வேண்டும் என்றால், அவருக்கு வேண்டிய பணி விடைகளைச் செய்து அவர் மனமிரங்கிச் சொல்லித் தருவதைக் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.

தச்சு வேலை, உழவு வேலை இன்னும் பிற பிற தொழில் கல்விகளெல்லாம் கூட இப்படித்தான்.

எத்தனை அடிமைத் தொண்டு செய்தாலும், ஆசிரியர் மனம் வைத்தால்தான் மாணவனுக்குத் தொழில் நுட்பம் தெரிய வரும்.

பெரும்பாலும், தன் தொழிலைத் தன் குடும்பத்து வாரிசுக்குத்தான் சொல்லிக் கொடுப்பார்கள். வெளியிலிருந்து கற்க வருபவன் எவ்வளவு உண்மையாகத் தொண்டு செய்தாலும், ஆசிரியரால் வஞ்சிக்கப் படுவதுதான் பெரும்பாலான வழக்கம்.

ஆசிரியர் மனம் கனிந்து, கற்க வந்த மாணவன் மீது பரிவும் அன்பும் கொண்டு கற்றுக் கொடுத்தால் அவன் பயன் பெறுவான்.

நல்ல மனிதர்களும் இருந்ததால், தொழில் கல்வி தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வந்தது என்று சொல்லலாம்.

ஓர் ஆசிரியரை யடுத்து, அவருக்கு மனம் மகிழத் தொண்டு செய்து அடிமைகளாக இருந்தவர்கள், அவருக்குப் பிறகு, சிறப்பெய்தித் தாமும் சில அடிமைகளை உண்டாக்கும் செயலில் சங்கிலித் தொடர்போல ஈடுபட்டார்கள்.