கலாச்சாரத்தைக் காக்க ஒரு குருகுலம்
37
திலிருந்து ரூபாய் ஐயாயிரத்துக்கு செக் வழங்கப்பட்டது.
தனிப்பட்ட முறையில் மலேயா சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து ஏறக் குறைய முப்பதாயிரம் ரூபாய் வசூலித்துக் கொடுப்ப தென்றும் தெரிவிக்கப்பட்டது. தீர்மானித்தபடி பெரியார் உடனடியாக ஐயாயிரம் ரூபாய்க்குச் செக் கொடுத்துவிட்டார்.
குருகுல வளர்ச்சிக்கு ஒரு நல்ல சூழ்நிலை உருவாகியது. காங்கிரசே பத்தாயிரம் ரூபாய் கொடுக்கிறது என்றவுடன் நாட்டுணர்வு படைத்த பல செல்வர்கள் நிதிஉதவி வழங்கினார்கள்.
ஆனால், மிகக் குறுகிய காலத்தில் வ.வே.சு ஐயர், மக்கள் நல்லெண்ணத்தில் மண்ணை வாரிப் போட்டு விட்டார்.
பாரத அன்னையின் அடிமை விலங்கை யொடித்தெறியப் பாடுபட்ட இளந் தொண்டர்கள் ‘நவபாரதம்’ எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று கனவு கண்டார்களோ, அந்தக் கனவை யெல்லாம் குலைப்பதாக இருந்தது. குருகுலத்தில் ஒரு நாள் நடந்த நிகழ்ச்சி.
அந்த நிகழ்ச்சிக்காக வருத்தம் தெரிவிப்பதற்குப் பதில், அதுதான் சரியென்று வாதிட்டார் அய்யர்.
அய்யர் செய்தது சரியென்று வாதிட்டார்கள். இராசாசி போன்ற அன்றைய பார்ப்பனத் தலைவர்கள்.