பக்கம்:குறட்செல்வம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

திருவள்ளுவர் இச் செய்தவத்தின் முைறயை மறப்பது போலப் பலர் கருதுகின்றனர். அதற்குக் காரணமாக இருப்பது,

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின். என்ற குறள். திருவள்ளுவர் உலகியல் முழுவதும் கண்டு உணர்ந்த சான்றோர். ஆதலின், அவர் முறையாகவே கூறியுள்ளார். அவர், மழித்தலையும் நீட்டலையும் முழுது மாக மறுக்கவில்லை. அச் செயல் முறையைத் தன் னுடைய_உடலையும் உள்ளத்தையும் கட்டுப்படுத்திப் பழக்கத்திற்குச் சாதனமாகக் கைக் கொள்ளுவதற்கு உடன்படுகின்றார்.

தவம் முடிவல்ல முயற்சியே. இம் முயற்சியில் வெற்றி அடைவோர் சிலர் தோல்வியுறுவோர் பலர். ஆனாலும் தவம் செய்வதை மனப்பூர்வமான இலட்சியமாக ஏற்றுக் கொண்டு, தவம் செய்யும்பொழுது ஏற்படும் வெற்றித் தோல்விகள் வேறு.

அந் நிலையில் ஏற்படும் தோல்விகளை, தவறுகளைப் பற்றியதல்ல திருவள்ளுவரின் கவலை. தவம் செல்வாக் குடையது என்று கருதி அதனை மேற்கொள்வதின் மூலம், தம்முடைய உலகியல் வேனவாக்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கருதி, உலகியல் வாழக்கையை, இலட்சியமாகக் கொண்டு அதனையடைய தவத்தினை ஒரு கருவியாகத் திட்டமிட்டு வஞ்ச மனத்தோடு மேற். கொள்வாரைப் பற்றியதே திருவள்ளுவரின் கவலை. இதனை, .۰۰۰ است , .

வலியின் கிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்க் தற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/122&oldid=1276422" இலிருந்து மீள்விக்கப்பட்டது