பக்கம்:குறட்செல்வம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸69

அதனாலன்றோ அப்பர் அடிகளும்கூட சமுதாய்த் தோடு பழகுதற்குரிய இனிய பழக்கமாக, குணங்களைச் சொல்லியும் குற்றங்களைப் பேசியும் வாழவேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.

சொல்லுதலுக்கும் பேசுதலுக்கும் இடையேயுள்ள வேற்றுமையைப் பற்றி நாம் சாதாரணமாக நினைத்துப் பார்ப்பதில்லை. ஆனால் அப்பரடிகள் பெரிய வேற்றும்ை யைக் காண்கிறார். சொல்லுதல் என்பது பிறரிடத்தில் ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றிய குற்றங்களைச் சொல்லுதலைக் குறிக்கும். அவ்வாறு சொல்லுதல் குற்றம். சொல்லுதல் மட்டும் குற்றமன்று. அத்தகு. சொல்லாடலைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் குற்றம்.

அதனாலன்றோ, அறங்கூறும் அவையில் இருபாலும் கேட்டு, மறுக்கவோ உடன்பாடாகவோ உரிய வாய்ப்புகள் முழுமையும் கொடுத்து, பின் அறங்கூறப் பெறுகிறது. ஆனால், இன்றோ புறங்கூறலே பெருகி வளர்ந்திருக் கிறது. அதையும் உண்மையென்று நம்பி உரியவரைக் கேட்காமலேக்கூட மாறுபாடும், சினமும் கொள்கிறவர்கள் பொறுப்பு வாய்ந்தவர்களில்கூட இருக்கிறார்கள் என் றால் என்னென்று கூறுவது?

ஒருவர் இல்லாதபோது அவருடைய குற்றங்களைச் சொல்லுதல் - கூறுதல் புறங்கூறல் ஆகும். அதனைத் கூடாதென்று தேவாரம் கூறுகிறது. அடுத்து. ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவையிலும்கூட புறங்கூறும் குற்றம் விளக்கப் பெறுகிறது. "தீக்குறளைச் சென்றோதோம்’ என்பது ஆண்டாள் வாக்கு. குறளை என்பது கோள், புறம் ஆகிய சொற்களைக் குறிக்கும். அதுவும் தீக் குறளை என்று சொன்னது உண்மையல்ல்ாத பொய்யை, தீமை பயக்கக் கூடியதை வலிய்த் தாமே சென்று மற்றவர் களிடம் சொல்லுதலைக் குறிக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/71&oldid=1276360" இலிருந்து மீள்விக்கப்பட்டது