இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குறள்நெறி
22. இடம் அறிதல்.
பொருட்பால். அதிகாரம்-50. இராகம் - கல்யாணி, தாளம் - சாபு,
கண்ணிகள்.
1.இடங்கண்டு எதனையும் செய்திடுக
எட்டாத பழத்தையும் கொய்திடுக - மன்னா தொடங்கிய வினையதை முடிப்பதிலே தோன்றும்இடர் வெல்க துடிப்புடனே.
2.எண்ணிய பகைவரின் இதயம்கண்டு
ஏற்றஇடம் காணின் வெற்றியுண்டு - மன்னா திண்ணிய ராதலே தன்னறிவாலே தீரம் செல்லும் இடம் நன்கறிவாயே.
3.முதலையும் யானையை புனலில் வெலலும்
முன்னது தோற்குமே தரையில் என்றால் - மன்னா கதறினும் தேரோட்டம் கடலினில் செல்லாது கப்பலோ தரையினில் நடவாது ஈதுண்மை.
4.அஞ்சாமை என்றுமே துணையாகும்
அரும்பகை கடந்திடப் புணையாகும்- மன்னா எஞ்சாமை எண்ணியே ஏற்றவை செய்திடின் எந்தப்பகைமையும் இருக்காது மெய்மை.
40 40