கா ட் சி க ள் 16. I
முறையுடை அரசன் செங்கோல் அவையத்து யான் தற் கடவின் யாங்கு ஆவதுகொல் ? பெரிதும் பேதை மன்ற . அளிதோதானே - இவ் அழுங்கல் ஊரே !
--கோழிக் கொற்றன்
147. தங்கையின் கணையும் தமையன்மார் கணையும்
“இது ஒன்றும் கன்றாக இல்லை” என்றான் நண்பன். ‘'எது?’ என்றான் அவன். “நீ செய்வது?’ “என்ன செய்து விட்டேன் ?” ‘இப்படி மனதை அலைய விடலாமா ?” “அந்தப் பெண்ணேப் பற்றித்தானே சொல்கிறாய் ?” ஆமாம் !’ ‘கண்பா ! நீ விஷயம் தெரியாமல் சொல்கிறாய். ஏதோ அருவிக்கரையில் நின்று கொண்டிருந்த பெண். அவள்மீது நான் மோகம் கொண்டு விட்டேன் என்றுதானே சொல்கிறாய் !’
ஆமாம்”
அது தவறு. மலே நாட்டினர்களில் செல்வர் வீட்டுப் பெண் அவள். அவளது சகோதரர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள் ; வீரர் கள். வில் வல்லவர்கள். எப்போதும் செங்குருதி படிந்த அம்பும் வில்லுமாகவே தோன்றுவார்கள். அந்த அம்பு போன்ற கண்ணு டையவள் அவள். அவளே அடைவது எளிதல்ல நண்பா ! எளிதல்ல !’
தீண்டலும் இயைவதுகொல்லோ - மாண்ட வில்லுடை வீளையர் கல் இடுபு எடுத்த
11