பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 கு று ங் தொ ைக க்

அந்த உழவனின் வேகத்தையும் தனது வேகத்தையும் ஒப் பிட்டுப் பார்க்கிருன் அவன். தனக்குச் சொந்தமானது சிறு நிலம். உள்ளது ஒரே ஏர். அதைக் கொண்டு உழுது பயிர் செய்து பலன் காண ஆசை உழவனுக்கு.

உழவனின் உள்ளத்து ஆசையைத் தன் ஆசையோடு ஒப் பிட்டுப் பார்க்கிருன் அவன்.

தனது காதலியின் இளமை முதிருமுன்னே இல்லற இன்பம் துய்த்து, விரைவாகக் குழந்தைகளைப் பெற்றுப் பயன் பெற விரும்புகிருன் அவன்.

ஆசை உந்துகிறது. அந்த அளவுக்கு நடை ஓடவில்லே. காத வியின் ஊர் தொலைவில் உள்ளதுபோல் தோன்றுகிறது.

‘அடேயப்பா ! இன்னும் எவ்வளவு தூரம் 1’ என்று சொல்கிருன்.

ஆடு அமை புரையும் வனப்பின் பணத் தோட் பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே நெடுஞ் சேண் ஆர் இடையதுவே, நெஞ்சே, ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து ஒர் ஏர் உழவன் போல, பெரு விதுப்பு உற்றன்றால்; கோகோ யானே.

t -ஒரேருழவனர்

188. அழிந்த உள்ளமும் இழந்த காதலனும்

விம்மி விம்மி அழுதாள் அவள். கண்ணிரும் கம்பலேயுமாக நின்றாள். துயரமே உருவாகத் தோற்றமளித்தாள். காரணம் என்ன ? காதல்.

விரைவில் வந்து விடுகிறேன்’ என்று சொல்லிப் போனுன் அவளது காதலன். ஆனல் வரவில்லே. நாட்கள் பல சென்றன. ‘வருவான் வருவான்’ என்று எண்ணி வழிமேல் விழி வைத்து கின்றாள். நாட்கள் வாரங்களாயின. வாரங்கள் மாதங்களாயின. வந்தபாடில்லே.