278 கு று க் தொ ைக க்
‘வீட்டிலே கூடுகட்டி வசிக்கிறது : குஞ்சுகளுடன் வசிக் கிறது’
“அப்புறம்’
‘முற்றத்திலே உலர்த்தியுள்ள தானியங்களைத் தின்கிறது’
‘இந்த மாதிரி குருவிகள் அங்கேயும் இருக்குமல்லவா?”
- grtij (335?”
“அவர் சென்ற இடத்திலே’
‘குருவி தன் குஞ்சுகளுடன் கொஞ்சி விளையாடுதல் கண்ட பிறகாவது அவருக்குத் தன் பெண்டாட்டி பிள்ளைகளின் நினைவு வராதா?” -
‘வரும்; வரும்’
‘நமக்கு வருகிற - துன்பந்தருகிற இந்த மாலே அவருக்கும் உண்டு அல்லவா! அங்கும் வருமல்லவா! இவற்றை யெல்லாம் கண்ட பிறகும் அவர் விரைவில் வராமல் இருப்பாரா?” ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன கூம்பிய சிறகர் மனே உறை குரீஇ முன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்து எருவின் நுண் தாது குடைவன ஆடி, இல் இறைப் பள்ளித் தம் பிள்ளையொடு வதியும் புன்கண் மாலேயும், புலம்பும், இன்றுகொல் - தோழி! - அவர் சென்ற நாட்டே?
-மாமிலாடன்
290. விலைமாதும் விளையாட்டும்
அவளுக்குக் கோபம் காதலன் மீது. காரணம் அவன் பரத்தை வீட்டில் தங்கியிருப்பதே,
ஒருநாள் அவனது நண்பன் ஒருவன் வந்தான்.
‘என்ன, எப்படி” என்று கேட்டுக் கொண்டே வந்தான்.
‘வாருங்கள், உட்காருங்கள்’
“எங்கே அவர் ?”