பக்கம்:குறும்பா.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

கோவேந்தன்


அரசாங்க உந்துவண்டி ஏறி
அவல முற வண்டிபல மாறி
புறப்பட்ட இளைஞனவன்
போய் இறங்கக் கண்டவர்கள்
இரக்கம் உற்றார் முதுமையினைக் கூறி!



ஒட்டக் கூத்தர் மீண்டும் இங்குப் பிறந்தார்
உள்ள பல ஏடுகளைத் திறந்தார்;
புட்டத்தில் கால்படவே
உயிர் பிழைத்தால் போதும் என்று
'புதுக்கவிதைக் காரர்' எல்லாம் பறந்தார்!



வருவாய் வரி அதிகாரி நான் என்றார்
வண்ணப்படக் காரிகண்ணால் கொன்றாள்.
திரும்ப, மனம் இல்லாமலே
திரை நடிகைக் காலழகில்
வருமானம் விட்டுத் தெரு நின்றார்!



பாண்டவரும், கெளரவரும் பிறந்தார்
பாரதத்தின் தேர்தலிலே பறந்தார்;
ஆண்டவர்கள் வாக்கெடுத்தார்
கெளரவர்கள் ஆளவந்தார்
மாண்புகளாய் மாநிலத்தில் சிறந்தார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/33&oldid=1200880" இலிருந்து மீள்விக்கப்பட்டது