பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 குற்றம் பார்க்கில் பொறந்த பொறப்பு மாதிரி கவனிக்குதுங்க. நீ போய் தூங்கு நய்னா." வாத்தியார், சிஷ்யர்களைப் பார்த்துக் கொண்டே போனார். சிஷ்யர்களின் முகங்கள், கிழவியிடமும், காத்தாயியிடமும் மன்னிப்பைக் கோரும் பாவனையைக் காட்டின. கிழவி மட்டும், "வாத்தியாரண்ட சொன்னாத் தெரியும் சேதி, செருப்பு பிஞ்சாக் கூட தாங்கிக்கலாம்: பொழப்பே பிஞ்சியிருக்கும். இந்த ஏரியாவுக் குள்ள தல காட்டியிருக்க முடியாது" என்றாள். டெப்டி-வாத்தியார், "டேய் நோஞ்சான், ஆத்தாவுக்கும், தங்கச்சிக்கும். டியும், பன்னும் வாங்கிக்கினு வாடா," என்று சொல்லி, நிஜார்ட் பைக்குள் கையை விட்டு காசை எடுத்துக் கொடுத்தான். தங்கச்சி' என்ற வார்த்தையில், சகோதர பாசம் தானாக, தேனாக ஒலித்தது. காத்தாயி கண்களைத் துடைத்துக் கொண்டாள். நோஞ்சான், ஒரு ஈயப் போணியுடன் வெளியேறினான்.