பக்கம்:குற்றால வளம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

105


 யாலும் புறந்துய்மையற்றுக் கிடந்தமையாலும் அன்ன பிற செய்தமையாலுமே அவர் ஒதுக்கப்பட்டிருத்தல் வேண்டும். இன்றும் அவை புரிவோரைத் தீண்டத்தகாதராக ஒதுக்கலாம். வேறு பல இழிந்த செயல் ஆற்றுவோரையும் தீண்டத் தகாதாராகக் கொள்ளலாம்.


தீண்டத்தகாதார் யார்? புலாலுண்போர் தீண்டத்தகாதார்! பொய் பேசுவோர் தீண்டத் தகாதரர்! வஞ்சகம் செய்வோர் தீண்டத் தகாதார்! கொலை செய்வோர் தீண்டத்தகாதார்!. கள்ளருந்துவோர் தீண்டத்தகாதார்! காமம் நுகர்வோர் தீண்டத்தகாதார்! வரம்பு கடந்த செயல் என்னென்ன உண்டோ அவை செய்வோர் அனைவரும் தீண்டத்தகாதார்! வாளா ஒரு பெருங் கூட்டத்தாரைத் தீண்டத் தகாதார் எனப் பொருளின்றிப் புகலும் தீயோர்கள் எல்லோரையும்விடக் கொடிய தீண்டத்தகாதார்!!




"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/114&oldid=1325617" இலிருந்து மீள்விக்கப்பட்டது