பக்கம்:குற்றால வளம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

தெய்வத்தன்மை


தெய்வத்தன்மை வாய்ந்த பெரியார் பிறப்பதில்லையென அவர் பேசுகின்றனர். இப்பெரும் பொய்யை அறிவு உலகம் யாங்ஙனம் ஏற்கும்?


மற்றும், தெய்வத்தன்மையுடையார் என்று சிலரைக்கூறி, அவர்பால் இயல்புக்கு மாறான செயல்களை ஏற்றி, அவை வல்லார்தாம் தெய்வத்தன்மையுடையார் என்று செப்புதல் மிகப் பெரும்பாலார்க்கு மரபாகிவிட்டது. இதில் எக்கச்சமயத்தாரும் பின்வாங்கவில்லை. எல்லோரும் தங்கள் சமயாச்சாரியார்களின் தெய்வத்தன்மைகளை விளக்க அற்புதங்கள் என்ற பெயரால் பொருத்தமற்ற செயல்களையெல்லாம் புகன்றிருக்கின்றார். அவர் கூறிவைத்திருக்கும் அச்செயல் வல்லார் எவரும் இந்நாள் இருக்கமாட்டாரென்பது எல்லோர்க்கும் உறுதி. அவ்வாறு செய்யும் ஒருவரை இன்று கண்கூடாகக் காட்ட முடியாதன்றோ? அன்றிருந்தார் என்று எழுதிவைத்தல் அரிதன்று. இன்று அப்படிக் காட்டமுடியாதென்ற துணிவு கொண்டுதான் அன்றிருந்தார் தெய்வத் தன்மை யுடையாரென்றும் இன்று அன்ன தன்மையாளர் யாரும் இருக்கமுடியாதென்றும் அவர் அறைகின்றார். அஃதுண்மைதான். செய்யத்தக்க செயலாக இருந்தாலன்றோ அது செய்பவர் இருப்பர்? செய்யத்தகாத செய்வார் அன்றுமில்லை, இன்றுமில்லை என்றுமில்லை யென்பது சரிதம். சென்றவரைப்பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதிவைக்கலாம். எழுத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/21&oldid=1291624" இலிருந்து மீள்விக்கப்பட்டது