பக்கம்:குற்றால வளம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

13

 எதனையும் எழுதிவிடலா மன்றோ? எழுதினதற்காக அது உறுதியாகிவிடுமா? அறிவு உலகமாகிய தீயில் அச்சாணங்கள் சாம்பலாவது சத்தியம்.


இந் நாள் வாழும்மக்கள் சரிதங்களில் பின்னாளில் அற்புதங்கள் சேர்க்கப்பட்டுவிடும். இப்படியே. புனைந்து அறிவை அழித்துக்கொண்டு செல்கிறார் மூடமக்கள். இத்தொல்லைகள் தம் சரிதையில் இடம்பெறலாகாதென்று கருதியே காந்தியடிகள் தம் காதையைத் தாமே எழுதி வைத்தார். தெய்வத்தன்மைக்கு அவர்கள் அறையும் அற்புதங்கட்குப் பொருள் உண்டோ? அக்காதைப் பொய்களை யெல்லாம் நிகழ்ச்சியாக்கொண்டு, அவைகளைத் தெய்வக் தன்மையுடைய பெரியார்க்கு இலக்காகக் கொள்தல் பெருமூடத்தனமாகும். பன்னாள் முன்னர் இறந்துபட்டவர்களை உயிர்ப்பித்ததாகக் கூறுவனபோன்ற பெரும் பொய்க் கதைகளை மெய்யென்று நம்புவதற்கு இரங்குதலன்றி என் செய்வது! தவிர,


பிறப்பினாலோ, அற்புதங்கள் ஆற்றியதாக அறைவதாலோ, பிற எதனாலோ தெய்வத் தன்மையுடையவரென்று சிலருக்கு முத்திரையிட்டுவிட்டு அவர் செய்யும் இழிசெயல்களையும் பெருமைப்படுத்தவும் அஞ்சுகின்றாரில்லை அவ் அற்புதக்கூட்டத்தார். என்னே! அப்பேதைகள் மதியிருந்தவாறு!! செய்தவர் மாகானா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/22&oldid=1291632" இலிருந்து மீள்விக்கப்பட்டது