பக்கம்:குற்றால வளம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

25


 ஒவ்வொரு அறமும் நாள் ஆக ஆக நோக்கம் மறந்து அறத்தின் மாறுபட்டனவாக மாறி விடுவதை இவற்றுனும் இன்னும் பலவற்றானும் அறியக்கிடக்கின்றது. விரிவஞ்சி விடுக்கின்றேன். உலக இயல்பு இதுவேயாகும். அறிவோர். என்றும் அறக்கடனிறுத்தல்-அதாவது சீர்திருத்தம் செய்தல்-அரும்பணிசெய்து கிடத்தலிலேயே வாணாள் கழிப்பர். கடன் முடிந்த தென்று ஓய்வு பெறுநாள் அறவோர்க்கில்லை. அவ்வாறு ஓய்வு பெறவிடுதல் உலக இயல்பன்று. ஓயாமல் அறவோர்க்குப் பணி தந்து கொண்டிருத்தலே உலக இயல்பு.



"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/34&oldid=1293895" இலிருந்து மீள்விக்கப்பட்டது