பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலைத் துளை இலையின் உள்ளமைப்பு 22 இழை - இன் வளர்ச்சிக்குச் சூரிய ஒளி அவசியமாகை யால் ஒரு செடியின் இலைகள் யாவும் சூரியனை நோக்கியே வளர்ந்திருக்கும். அவை ஒன்றையொன்று மறைப்பதில்லை . பார்க்க: ஒளிச்சேர்க்கை. வறண்ட பகுதிகளில் தாவரங்களுக்கு நீர் கிடைப்பது அரிது. எனவே இப்பகுதி களிலுள்ள தாவரங்களின் இலைகள் கிடைத்த நீரைச் சேமித்து வைத்துக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. சப்பாத்தி, கள்ளி போன்ற தாவரங்களின் இலைகளும் தண்டுகளும் நீரை அதிக அளவில் சேமித்து வைத்துக்கொள்ளும் வகையில் மிகவும் தடிப்பாக இருக்கின்றன. விலங்குகள் இவ்விலைகளைத் தின்றுவிடாம லிருக்க இவற்றில் முள் இருப்ப துண்டு . | இலைகளில் தேவைக்கு அதிகமாக உள்ள நீர் இலைத் துளைகள் வழியே வெளியேறி விடும். இதைத் தடுக்கச் சில தாவரங் களின் இலைகள் மிகச் சிறியவையாக, ஊசி போல இருக்கும். சவுக்கு மரத்தின் இலை களைப் பார்த்தால் இதை அறிந்துகொள்ள லாம். சில தாவரங்களில் இலையே இருக் காது. தாவரத்தின் தண்டே உணவைத் தயாரித்துக்கொள்ளும். பல விலங்குகள் இலைகளைத் தின்று உயிர் வாழ்கின்றன. கீரைகளை நாமும் உண் கிறோம். கீரைகள் சத்து நிறைந்தவை. செடி, கொடிகள் சிலவற்றின் இலைகள் மருந்தாகவும் பயன்படுகின்றன. இவற் றுக்கு மூலிகைகள் என்று பெயர். இழை : நீங்கள் உடுக்கும் ஆடை களில் குறுக்கும் நெடுக்குமாக நூல்கள் பின்னப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இந்த நூல்கள் ஒவ்வொன்றும் பல இழைகளைக் கொண்டு முறுக்கப்பட்டவை. ஒரு நூலின் முறுக்கை அவிழ்த்தால் உரோமம் போன்ற மிகமிக மெல்லிய இழைகளைக் காணலாம். - பருத்தி விதையைச் சுற்றிப் பஞ்சு இருப் பதைப் பார்த்திருப்பீர்கள். பருத்தி இழை களைத்தான் நாம் பஞ்சு என்கிறோம். சணல், ஆளி முதலிய வேறு பல தாவரங் களிலிருந்தும் இழைகள் கிடைக்கின்றன. இவற்றை நார் என்றும் சொல்வதுண்டு. ஆடு, ஒட்டகம் ஆகியவற்றின் உரோமமும் இழைதான். அதைக் கொண்டும் நூல் நூற்கிறார்கள். இந்நூலி னால் கம்பளி ஆடைகள் நெய்கிறார்கள். பட்டுப் பூச்சிப் புழுவிலிருந்து வெளியாகும் ஒரு பசை, உலர்ந்து பட்டு இழையாகிறது. இது மிகவும் மெல்லியதாக இருக்கும். இந்த மெல்லிய இழைகளைக் கொண்டு பட்டுநூல் உண்டாக்குகிறார்கள். இப்போது செயற்கை முறையில் பல விதமான இழைகளைச் செய்கிறார்கள். ராம்பிள்ளைவாதம் ரசாயன முறையில் தயாரிக்கப்படும் இந்தச் செயற்கை இழைகளைக் கொண்டு செய்யப்பட்ட நூலினால் லினன், நைலான், டெரிலீன் போன்ற துணிகள் நெய்கிறார் கள். பார்க்க : ஆடை அணிகள்; கம்பளி; சணல்; நைலான்; பட்டு; பருத்தி; லினன். இளங்கோவடிகள் : கண்ணகி கோவலன் கதையை நீங்கள் படித்திருப் பீர்கள். அதை அழகான செய்யுள் வடிவில் எழுதியவரே இளங்கோவடிகள். இவர் சுமார் 1,800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந் தவர். சேரநாட்டு மன்னன் சேரலாதனின் இளைய மகன். இவருடைய அண்ண ன், சேரன் செங்குட்டுவன். அண்ணன் இருக்க இவருக்கே அரசபட்டம் கிடைக்கும் என்று நிமித்திகர் ஒருவர் சோதிடம் கூறினாராம். அண்ணனுக்குப் பட்டம் கிடைப்பதுதான் முறை. ஆகையால் தம் அண்ணனே அரசராக வேண்டும் என்று விரும்பினார் இளங்கோ . உடனே அவர் தம் அரச வாழ்வையும், அரண்மனையையும் கைவிட்டார்; துறவியானார். குணவாயில் என்ற ஊரில் சமணரின் கடவுளான அருகன் கோயிலில் தங்கித் தவம் இருந் தார். இயல் இசை நாடகம் என்னும் முத் தமிழிலும் இளங்கோவடிகள் வல்லவர். தமிழ்நாடு முழுவதையும் நன்கு அறிந்த வர். கோவலன் கண்ணகி வரலாற்றை நேரில் கேட்டறிந்து அவர்களைக் காப்பியத் தலைவர்களாக வைத்து அரிய நூல் ஒன்றை இயற்றினார். அதுதான் சிலப்பதி காரம் (த.க.) என்ற நூல். கண்ண கி யின் கால் சிலம்பின் காரணமாக நடந்த கதையாதலால் இந்நூலுக்கு இப்பெயர் இடப்பட்டது. இந்நூலில் உள்ள பாடல்கள் சில இசையுடன் பாடக் கூடியவை. முறை தவறிய மன்னன் கேடு உறுவான்; கற்பிற் சிறந்த பெண்களை உலகம் தெய்வமாக மதிக்கும்; தீயது செய் வோருக்கு விதி தீயதையே விளைவிக்கும் என்ற கொள்கைகளை இவர் தம் நூலில் எடுத்துக் கூறியுள்ளார். இளங்கோவடிகளின் காலத்தில் சோழ நாடு, பாண்டிய நாடு, சேர நாடு என்று தனித்தனி நாடுகள் இருந்தன. எனினும் அந்த மூன்று நாடுகளையும் ஒன்று சேர்த்துத் தமிழ்நாடு என்று இவர் குறிப்பிடுகின் றார். தம் நூலில் சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய எல்லா சமயங் களையும் இவர் சிறப்பித்துள்ளார். இளம் பிள்ளை வாதம் : குழந்தை களுக்கு வரும் கொடிய நோய்களில் இளம் பிள்ளைவாதமும் ஒன்று. இது முதுகுத் தண்டு, நரம்பு மண்டலம், சில தசைகள்