பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறகு - இன் இவற்றைத் தாக்கிக் குழந்தைகளை முட மாக்கும். இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கே வரும். சில சமயம் பெரியவர்களையும் இது பற்றுவதுண்டு. மிகச் சிறிய உருவத்தைப் பெரிதாகக் காட்டும் மைக்ராஸ்கோப்பினாலும் ( த.க. ) பார்க்கமுடியாத மிக நுண்ணிய கிருமியினால் (வைரஸ்) இந்நோய் உண்டா கிறது. இந்நோய் கண்டவுடன் காய்ச் சலும், தலைவலியும், வாந்தியும், வயிற் றுப்போக்கும் உண்டாகும். கழுத்துத் தசையை அசைக்க முடியாது. கழுத்தும் முதுகும் தொட்டால் வலிக்கும். கைகள் நடுங்கும். வலியினால் குழந்தை தொடர்ந்து அழும். இந்த அறிகுறிகளைக் கண்டவுடன் மருத்துவரிடம் குழந்தையை எடுத்துச் சென்று தக்க சிகிச்சை செய்யவேண்டும். இளம்பிள்ளைவாதத்தினால் குழந்தையின் எலும்புகள் வளைந்து போவதுண்டு. இன்றைய மருத்துவ முன்னேற்றத்தால் இதைத் தடுக்கச் சாதனங்கள் உள்ளன. பழுதான நரம்புகளையும், தசைகளையும் கூடச் சில பயிற்சிகளின் மூலம் சீராக்கலாம். இந்நோயினால் குழந்தைக்கு மூச்சுத் திணறுவதும் உண்டு. இரும்பு நுரையீரல் (த.க.) என்னும் சிகிச்சைக் கருவியைக் கொண்டு குழந்தையைக் காப்பாற்றலாம். இந்நோயினால் பழுதான நரம்புகளையும், தசைகளையும் சீராக்க மின்சாரக் கருவிகள் உள்ளன. நோயாளியின் மலம், சளி இவற்றின் மூலம் இத்தொற்று நோய் பிறருக்குப் பரவுகிறது. நோய்த்தடுப்பு முறைகளைக் கையாண்டு இந்நோய் பரவாமல் தடுக்க லாம். இளம்பிள்ளை வாதம் வராமல் தடுக்க ஊசிமருந்து கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. அம்மை குத்துவதுபோல் குழந்தை களுக்கு இந்த ஊசியைப் போட்டுவிட் டால் அவர்களுக்கு இந்நோய் வராது. வாய் வழியாகக் கொடுக்கும் மற்றொரு மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறகு : மயில் பார்ப்பதற்கு எவ் வளவு அழகாக இருக்கிறது! மயிலுக்கு இவ்வளவு அழகைக் கொடுப்பது பல நிறங் கள் கொண்ட அதன் இறகுகளே. மயிலைப் போலவே இன்னும் எவ்வளவோ அழகிய பறவைகள் உள்ளன. இறகுகள் இல்லை யென்றால் அவற்றைப் பார்க்க அழகாக இராது. | பறவையின் அலகும் கால்களும் தவிர அதன் உடலில் மற்ற எல்லா இடங்களி லும் இறகுகள் உள்ளன. இறக்கையிலும் வாலிலும் உள்ள இறகுகள் நீளமாகவும், உறுதியாகவும் இருக்கும். இவை பறப் பதற்கு உதவியாக இருக்கின்றன. இறகு கா நாகரிகம் 23 கள் இல்லாவிட்டால் பறவையால் பறக்க முடியாது. இறக்கைகளுக்கு அடிப்புறத்தி லும் மற்ற உடற்பகுதிகளிலும் உள்ள இறகுகள் மென்மையாக இருக்கும். இவற் றுக்குத் தூ வி என்று பெயர். மயிர் போன்ற இழைகளை உடைய மிகச் சிறிய இறகுகளும் உண்டு. உடலின் வெப்பம் வெளியேறாமலும் குளிர் தாக்காமலும் பறவைக்கு இறகுகள் பாதுகாப்பு அளிக் கின்றன. தாய்ப் பறவை தன் கூட்டில் இறகுகளை மெத்தை போலப் பரப்பித் தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும். ஒரு நீண்ட இறகை எடுத்துப் பார்த் தால் அதன் நடுவில் குழல்போன்ற காம்பு இருப்பதைக் காணலாம். இதற்கு முருந்து என்று பெயர். அதன் இரு பக்கங்களிலும் விசிறி போன்று அகன்ற பாகம் உண்டு. இதில் சிறிய சிறிய இழைகள் ஒன்றொ டொன்று ஒட்டி இணைந்து இருக்கும். இத் தகைய அமைப்பினால் தான் பறவையால் இறக்கைகளை வேகமாக வீசிப் பறக்க முடிகிறது. சில பறவைகளின் அழகிய இறகுகளைச் சிலர் தலையில் அலங்காரமாக அணிந்து கொள்வார்கள். சில பறவை இனங்களின் மென்மையான தூவிகளை மெத்தைகளிலும் தலையணைகளிலும் பஞ்சுக்குப் பதிலாக நிரப்புவார்கள். கழுகு போன்ற பறவை களின் பெரிய இறகுகளைப் பழங்காலத்தில் எழுதுகோலாகப் பயன்படுத்தி வந்தனர். மயிலின் இறகுகளால் அழகான விசிறி கள் செய்கிறார்கள். இன்கா நாகரிகம்: தென் அமெரிக்கா வின் மேற்குக் கடற்கரையோரப் பகுதியில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவகை அமெரிக்க இந்தியர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் தங்கள் அரசனை இன்கா என அழைத்தனர். ஆகையால் இவர்களுக்கு இன்கா மக்கள் எனப் பெயர் ஏற்பட்டது.