பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈஸ்ட்டு ஸ்லாம் மதத்தைப் பரப்பினர். இஸ்லாம் மதத்தை ஏற்க மறுத்த பலர் பாரசீகத்தி லிருந்து வெளியேறி இந்தியாவுக்கு வந் தனர். அவர்களின் வழிவந்தோர் இன்று பார்சிகள் என அழைக்கப்படுகின்றனர். ஈரான் இன்று ஒரு முடியாட்சி நாடாக உள்ளது. இந்நாட்டு அரசருக்கு ஷா என்று பெயர். மக்களில் பெரும்பாலோர் முஸ் லிம்கள். பாரசீகம் அரசாங்க மொழி யாகும். நாட்டின் தலைநகர் டெஹரான். ஈஸ்ட்டு: வீட்டில் இட்டலி மாவையும் தோசை மாவையும் புளிக்க வைப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அரிசி மாவை அரைத்துத் தண்ணீரில் கரைத்து வைப்பார்கள். சிலமணி நேரம் கழித்து, அந்த மாவு புளித்துப் பொங்கி வரும். இந்தப் புளித்த மாவினால் சுட்ட இட்டலியும், தோசையும் தின்பதற்குச் சுவையாக இருக்கும்; எளிதில் செரிக்கும். அரிசி மாவு ஏன் புளிக்கிறது தெரியுமா? கண்ணுக்குத் தெரியாத மிகச் சிறிய தாவர உயிரணுக்கள் (த.க.) கோடிக்கணக்கில் காற்றில் கலந்துள்ளன. இவை ஒவ்வொன் றும் ஒரே உயிரணுவால் ஆனவை. அவற் றுள் சில காளான் ( த. க. ) வகையைச் சேர்ந்தவை. இவ்வுயிரணுக்களுக்கு ஈஸ்ட்டு என்று பெயர். அரிசி மாவில் கலந்தவுடன் இவை கோடிக் கணக்கில் பெருகிவிடுகின் றன. மாவில் ரசாயன மாற்றம் ஏற்படு கிறது. இதனால் மாவு புளிக்கிறது. இந்த மாற்றத்துக்கு ' நொதித்தல்' என்று பெயர். ஈஸ்ட்டின் கலப்பினால் மாச்சத்து சர்க் கரையாக மாறுகிறது. ஈஸ்ட்டு இந்தச் சர்க்கரையை ஆல்கஹாலாகவும் (த.க.) கார்பன் டையாக்சைடாகவும் (த.க.) பிரிக் கிறது. இட்டலி அடுப்பில் வேகும்போது மாவில் கலந்துள்ள கார்பன் டையாக்சைடு வெளியேறிவிடுகின்றது. ஆல்கஹாலும் ஆவியாக மாறிவிடும். கோதுமை ரொட்டி உப்பியிருப்பதற்கு ஈஸ்ட்டுதான் காரணம். ரொட்டி மாவை நன்றாகப் பிசைவார்கள். அதில் சிறிது ஈஸ்ட்டைக் கலப்பார்கள். இதற்கெனத் தயார் செய்த ஈஸ்ட்டு விலைக்குக் கிடைக் கும். ஈஸ்ட்டைக் கலந்தவுடனே ரொட்டி மாவில் நொதிப்பு ஏற்படும். மாச்சத்து சர்க்கரையாக மாறும். இந்தச் சர்க்கரை ஆல்கஹாலாகவும், கார்பன் டையாக்சை டாகவும் பிரிகின்றது. நொதித்த ரொட்டி மாவைச் சிறு சிறு தட்டுகளில் நிரப்பி ரொட்டி அடுப்புக்குள் வைப்பார்கள். மாவிலுள்ள ஆல்கஹால் சூட்டினால் ஆவி யாக மாறிவிடும். கார்பன் டையாக்சைடு மாவுக்குள்ளிருந்து நுரைத்துக் கொண்டு வெளியேறும். அதனால் மாவும் உப்பி எழும் பும். ரொட்டி பஞ்சுபோல இருக்கும். |--உடல் 29 பழச் சாறுகளைப் புளிக்க வைக்கவும் ஈஸ்ட்டைக் கலப்பதுண்டு. மோரில் ஈஸ்ட்டு இருக்கிறது. காய்ச்சிய பாலில் சில துளி மோரைப் பிரை குத்தினால் அதிலுள்ள ஈஸ்ட்டு பாலில் கலந்து வெகு வேகமாகப் பெருகும். அதனால் பால் தயிராக மாறுகிறது. சில மருந்து வகைகளிலும் ஈஸ்ட்டைக் கலப்பதுண்டு. ஈஸ்ட்டில் வைட்டமின் B இருக்கின்றது. உடல்: நீங்கள் மானைப் பார்த் திருப்பீர்கள். அதன் உடலில் பல உறுப் புகள் உள்ளன. ஒவ்வோர் உறுப்பும் பல்லாயிரக்கணக்கான நுண்ணிய அணுக் களால் ஆனது. இவ்வணுக்களை உயிர ணுக்கள் ( த. க. ) என்கிறோம். எல்லா உயிரினங்களின் உடல்களும் இவ்வித உயிரணுக்களால் ஆனவையே. மனிதனின் உடலும் பல கோடி உயிரணுக்களால் ஆனது. சராசரி வளர்ச்சியுள்ள ஒரு சிறுவன் அல்லது சிறுமியின் உடலில் சுமார் 100 கோடி உயிரணுக்கள் உள்ளனவாம்! இந்த உயிரணுக்கள் 'புரோட்டோப் பிளாசம்' என்னும் உயிர்ப்பொருளால் ஆனவை. இவை நுண்ணிய சிக்கலான அமைப்புகள் உடையவை. இவை தவிர நம் உடலில் அயோடின், ஆக்சிஜன், இரும்பு, கந்தகம், செம்பு, பாஸ்வரம், கால்சியம் போன்ற பல தனிமங்கள் (த.க.) இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் இந்தத் தனிமங்களைக் கொண்டு உயிரணுக்களை உண்டாக்க இன்னும் முடிய வில்லை . நமது உடலில் முக்கியமான உறுப்புகள் இரண்டு இரண்டாக உள்ளன. கண், காது, கை, கால், நுரையீரல் முதலியவை இணை களாக அமைந்துள்ளன. உடலின் உச்சி யில் இருப்பது தலை. தலையில் தான் மூளை யும், கண்கள், காதுகள், மூக்கு, வாய் ஆகிய புலனுறுப்புகளும் அமைந்திருக்கின் றன. கழுத்துக்கும் இடுப்புக்கும் இடையில் உள்ள பகுதியில் உணவைச் சத்துப் பொரு ளாக மாற்றக்கூடிய சீரண மண்டலம் (த.க.) உள்ளது. எலும்புக்கூடு உடலுக் கான சட்டகம் போல் இருக்கிறது. இது உடலுக்கு ஒரு வடிவத்தைக் கொடுக்கிறது; மூளை, இதயம், நுரையீரல் போன்ற முக் கிய உறுப்புகளையும் பாதுகாக்கிறது. எலும்புகளை மறைப்பதுடன் உடலுக்கு உருவம் கொடுப்பவை தசைகள். இவை எலும்புகளோடு ஒட்டி அமைந்துள்ளன. இவை சுருங்கி விரியும் தன்மையுடையவை. தசைகளால் தான் உடல் உறுப்புகளை நாம் அசைக்க முடிகிறது. எலும்புகளோடு ஒட்டாமலிருக்கும் சில தசைகளும் உண்டு.