பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 இதயம், இரைப்பை ஆகிய உறுப்புகள் இவ்வகைத் தசைகளாலானவை. உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்று இதயம். இது இரத்தத்தை உடல் முழுதும் செலுத்துகிறது. இரத்தம் எல்லா உறுப்பு களுக்கும் உணவு, நீர், ஆக்சிஜன் ஆகிய வற்றை எடுத்துச் செல்கிறது. உடலுறுப்பு களில் உள்ள கார்பன் டையாக்சைடை யும், கழிவுப் பொருள்களையும் வெளியேற்று வதும் இரத்தந்தான். உடலிலுள்ள உயிரணுக்களுக்கு ஆக்சிஜனை வழங்கவும், அவற்றிலிருந்து கார்பன் டையாக்சைடை வெளியேற்றவும் நுரையீரல்கள் உதவு கின்றன. நம் உடல் உறுப்புகள் தத்தம் வேலைகளை ஒழுங்காகச் செய்வதற்கு நரம்பு மண்டலம் (த.க.) உதவுகிறது. இம்மண்டலத்தில் மூளை, முதுகுத்தண்டு, நரம்புகள் இம்மூன் றும் அடங்கும். சுரப்பிகளும் உடலின் முக் கிய உறுப்புகளாகும். உடல் வேலை செய் வதற்கு வேண்டிய ரசாயனப் பொருள் களைச் சுரப்பிகள் சுரக்கின்றன. உடலினுள் இருக்கும் இத்தனை உறுப்பு களும் வெளியில் தெரியும்படியாக இருந் தால் அழகாக இருக்குமா? ஆகவே இவை யெல்லாம் தோலினால் மூடப்பட்டுள்ளன. தோல் நமக்கு அழகான தோற்றத்தைக் கொடுக்கிறது; உள்ளே இருக்கும் உறுப்பு களைப் பாதுகாக்கிறது. வியர்வை போன்ற கழிவுப்பொருள்களை வெளியேற்றுகிறது. நமது உடல் மனிதனால் செய்ய இயலாத ஓர் அதிசயமான எந்திரம். வளரு கின்ற சக்தி உடலுக்கு உண்டு. காய மடைந்தால் அந்த இடம் ஆறிவிடுகிறது. மேலும் ஒரு மரத்தின் விதையிலிருந்து அதே மரத்தைப் போன்ற இன்னொரு மரம் உண்டாகிறது. அதன் விதை யிலிருந்து வேறொரு மரம் முளைக்கிறது. மனிதர்களின் இனமும் இப்படிப் பெருகு கிறது. மனிதன் உண்டாக்கிய பேனாவி லிருந்து இன்னொரு பேனா உண்டாகுமா? உண்டாகாது. உயிரினங்களுக்கு மட்டுந் தான் இந்த அற்புத சக்தி உண்டு. உயிரில்லாத பொருள்களுக்கு இச்சக்தி கிடையாது. இதயம், இரத்த மண்டலம், எலும்பு மண்டலம், கழிவு மண்டலம், சீரண மண் டலம், நரம்பு மண்டலம், மூச்சு மண்டலம், கண், காது, மூக்கு மற்ற முக்கிய உட லுறுப்புகள் ஆகியவற்றுக்குத் தனிக் கட்டுரைகள் உண்டு. உடல்நலம் பேணுதல் : நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நாம் நோயின்றி ஆரோக்கியமாக வாழவேண்டு மானால் நம் உடலைத் தக்க விதத்தில் பாது காத்து வரவேண்டும். > பேணுதல் உடலை வளர்ப்பது உணவு . மாப் பொருள், புரதம், கொழுப்பு, உப்புகள், வைட்டமின்கள் ஆகிய ஊட்டச் சத்துப் பொருள்கள் உடலுக்கு இன்றியமையா தவை. இவை நாம் உண்ணும் உணவில் போதிய அளவில் இருக்க வேண்டும். எளிதில் சீரணமாகக் கூடியதும், ஊட்டச் சத்துப்பொருள்கள் போதிய அளவில் சேர்ந்துள்ளதுமான உணவை நாம் உண்ண வேண்டும். உணவை அளவுக்குமேல் உண்ணக்கூடாது. உண்டால் சீரண உறுப்புகள் விரைவில் களைத்து நோய் உண்டாகும். பசித்த பின் உண்பதே நல்லது. ஒருவர் ஒரு நாளில் குறைந்தது எட்டுக் குவளை நீர் அருந்த வேண்டும். உணவைச் சீரணமாக்க உதவுவதுடன் உடலிலுள்ள அழுக்குகளையும் நீர் அகற்றுகிறது. பால் மிகவும் நல்ல உணவு. வளரும் குழந்தை களுக்கு இதைத் தவறாமல் கொடுத்துவர வேண்டும். காப்பியும், தேநீரும் உடலுக் குக் கேடு விளைவிக்கும். நாள்தோறும் காலையிலும் மாலையிலும் குளிக்க வேண்டும். குளிப்பதால் வியர்வை யால் உண்டாகும் அழுக்கு நீங்கித் தோல் சுத்தமாகும். தட்பவெப்பநிலைக்கு ஏற்ற உடைகளையே உடுத்த வேண்டும். ஆடை யைத் தளர்த்தியாக அணிய வேண்டும். மிகவும் இறுக்கமாக உடைகளை அணிந்தால் இரத்த ஓட்டம் தடைபடும். கண் உடலின் மிகச் சிறந்த உறுப் பாகும். அதிக ஒளியைப் பார்ப்பதால் கண் கெடும். மங்கிய ஒளியில் படிக்கவோ, எழுதவோ கூடாது. கையாலோ, அழுக் கான துணியாலோ கண்ணைத் துடைக்கக் கூடாது. அவ்வப்போது கண்களை மூடிக் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை கண் மருத்துவரிடம் சென்று கண்களைச் சோதனை செய்வது நல்லது. காதும் ஒரு நுட்பமான உறுப்பாகும். இதில் அவ்வப்போது அழுக்கு வந்து அடையலாம். இதை மருத்துவரின் உதவி யுடன் நீக்க வேண்டும். குச்சியையோ கம்பியையோ காதில் நுழைத்து அதை நாமே எடுக்க முயலக்கூடாது. இதனால் காதில் உள்ள மற்ற உறுப்புகள் பழுதடை யலாம். பற்களை மிகவும் கவனமாகப் பாது காக்க வேண்டும். காலையிலும், இரவு படுக் கும் முன்னரும் பல் துலக்குதல் நல்லது. உண்டபின் பற்களுக்கிடையில் உணவுப் பொருள்கள் தங்கி இருக்கக்கூடும். இத் துணுக்குகளை உடனுக்குடன் நீக்காவிட் டால் இவை அழுகிவிடும். உணவுடன் வயிற்றுக்குள் சென்று நோய் உண்டாக் கும். விரல் நகங்களைச் சுத்தமாக வைத் திருத்தல் மிக முக்கியமானது. நகங்களின்