பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மலை 95 நாட் நேரம் இவ்வாறு இருந்து, பிறகு வியர்க் கும்: அப்போது காய்ச்சல் தணிந்துவிடும். இந்நோய் இவ்விதமாகப் பல களுக்கு விட்டுவிட்டு வரும். அதனால்தான் இதற்கு முறைக் காய்ச்சல் என்று பெயர். சில சமயங்களில், நோய் முற்றி மரணமும் ஏற்படும். எனவே, மலேரியா மலேரியா நோய் கண்டால் உடனே மருத்துவரிடம் தகுந்த சிகிச்சை செய்துகொள்ளவேண்டும். மலேரியாவை ஒழிப்பதற்குச் சிறந்த வழி அனோபிலிஸ் கொசு பரவாமல் தடுப் பதேயாகும். நீரில்தான் இக்கொசு முட்டையிட்டு வளரும். எனவே வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்காதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். கொசு வனரக்கூடிய நீர் நிலைகளில் கொசுவை அழிக்கக்கூடிய மருந்துகளைத் தெளிக்க வேண்டும். அதனால் கொசு பரவாமல் அழிந்துவிடும். கொசு மிகுதியாக உள்ள இடங்களில் கொசு வலையினுள் உறங்குவது நல்லது. மலை: இந்தியாவின் வட எல்லை இமயமலை என நீங்கள் படித்திருப் பீர்கள். இது தீண்டதொரு மலைத் தொடர். உலகிலேயே மிக உயரமான எவரஸ்ட் (த.க.) சிகரம் இம் மலையில் தான் உள்ளது. ஐரோப்பாக் கண்டத்தி லுன்ன ஆல்ப்ஸ் மலைகள், வட அமெரிக் காக் கண்டத்திலுள்ள ராக்கி மலைகள், தென் அமெரிக்காக் கண்டத்திலுள்ள ஆண்டீஸ் மலைகள் முதலியவை உலகி லுள்ள மற்ற முக்கியமான மலைத் தொடர் கன்.இந்தியாவில் விந்திய மலை. சாத்புரா மலை, மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக் இமயமலைத் தொடர். இடதுபுறம் மேலே இருப்பது எவரஸ்ட் சிகரம் ஆல்ப்ஸ் மலைச் சரிவில் வளைந்து வளைந்து செல்லும் பாதை குத் தொடர்ச்சிமலை ஆகியனவும் மற்றும் ஏராளமான சிறிய மலைகளும் குன்றுகளும் உள்ளன. ஆதி காலத்தில் மலைகள் எப்படித் தோன்றின தெரியுமா? பூமி தோன்றிய காலத்தில் இன்று இருப்பதுபோல் கடின மாக இருக்கவில்லை ; பாகுபோன்று இருந் தது. பூமி சுழலும்போது மேற்பரப்பு சில இடங்களில் அழுத்தத்தின் விளைவாக அலை போல உயரே எழும்பி உறைந்து மலையாக மாறிவிட்டது. பெரிய மடிப்பு போலத் தோன்றிய இத்தகைய மலைகளுக்கு மடிப்பு மலைகள் என்று பெயர். இமயமலை, ஆல்ப்ஸ். ஆண்டீன், ராக்கி மலைகள் ஆகியவை மடிப்பு மலைகளேயாகும். வேறுவிதமாகவும் மலைகள் தோன்றி யிருக்கின்றன. பூமியின் மேற்பரப்பு உறைந்து கெட்டியாக இறுகிய பின்னும், அதிக வெப்பத்தினால் உட்பகுதி பாகு போன்றிருந்தது. இப்பாகு பொங்கி எழுந்து, பூமியின் மேற்பரப்பை உயர்த்தி. மகியாக உருவாக்கிவிட்டது. சில இடங் களில், பூமியின் மேற்பரப்பில் வெடிப்பு ஏற்பட்டு ஒரு பகுதி தாழ்ந்தும் மற்றொரு பகுதி உயர்ந்தும் மலையாக மாறியிருக் கிறது. பூமியின் உட்பகுதியிலுள்ள பாறைக் குழம்பு இல சமயங்களில் தரையைப் பிளந்துகொண்டு வெளியேறுவது உண்டு. வெளிவரும் பாறைக் குழம்பானது வெடிப் பின் வாயைச் சுற்றிலும் வழிந்து இறுகிக் கூம்பிய மலை போகிறது. குழம்பு