பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18 விஸ்க்கம் புல்லுருவி புல்லுருவி - புலாலுண்ணிகள் காணப்படுகின்றன. ஆனால் இவை எந்தத் தாவரத்தில் ஒட்டுண்ணிகளாக இருக்கின் றனவோ அதிலிருந்து சத்துநீரை மட்டுமே உறிஞ்சும்; தம் உணவைத் தாமே தயாரித் துக்கொள்ளும். அதனால் இவற்றை அரை ஒட்டுண்ணிகள் (Hemi-parasites) என்பர். விஸ்த்கம், லொராந்த்தஸ் என்னும் புல்லுருவிகள் மா, புங்கன், வேம்பு, கறி வேப்பிலை முதலிய மரங்களின் கிளைகளில் வளருகின்றன. விஸ்க்கம் என்ற புல்லுருவி மரத்தின் கிளையில் ஓர் இடத்தில் ஒரு வேரைச் செலுத்தி இருக்கும். அதிலிருந்து பக்கவேர் மரத்தின் பட்டை க்கு ள் கிளைத்து, அந்தப் பக்கவேரிலிருந்து பல கிளைவேர்கள் மரத்துக்குள் இறங்கும். லொராந்த்தஸ் புல்லுருவியின் தண்டு, கொடிபோல் மரத்தில் படரும். அந்தத் தண்டிலிருந்து பல வேர்கள் பித்தான் களைப்போல் நெடுக மரக்கிளைகளைப் பற்றிக்கொண்டே போகும். இவற்றில் பச்சை இலைகல் உண்டு. இவ்விலைகளின் வாயிலாகச் சூரிய ஒளியைப் பெற்று, ஒளிச் சேர்க்கை (த.க.) முறையில் உணவைத் தயாரித்துக்கொள்கின்றன. பெரும்பாலான புல்லுருவிகள் எந்த இன மரத்தையும் பற்றிக்கொண்டு வளரும். இரண்டோர் இனங்கள் ஓரிரு இனமரங்கள் மட்டுமே பற்றும். இன்னும் சில புல்லுருளிகள் தரையில் தாமே வேரூன்றி வளர்கின்றன. இவற்றின் வேர் கள் அருகிலுள்ள மரஞ்செடிகளின் வேர் களைப் பற்றி அவற்றிலிருந்து சத்துப் பொருள்களை உறிஞ்சிக்கொல்கின்றன. இவற்றுள் நாயிட்சியா என்பது 10 மீட்டர் உயரம் வரையில் சிறு மரமாக வளரும். புல்லுருவிகளின் இனம் பெருக உதவு பவை பறவைகளே, விஸ்க்கம் புல்லுருவி யின் கனியில் விதையைப் பிசின் போன்ற கோழைப்பொருள் குழ்ந்திருக்கும், பறவை கள் இக் கனியைத் தின்னும்போது விதை அவற்றின் அலகில் அலகில் ஒட்டிக்கொள்ளும். அதை அகற்றப் பறவை தன் அலகை மரக் கிளைகளில் உராயும். அங்கு விதை ஓட்டிக் கொண்டு முளைக்கும். இவற்றின் மகரந் தச் சேர்க்கையும் பறவைகளின் மாகவே நடக்கிறது. பறவையின் அலகு படும்போது, மகரந்தம் அதன் அலகில் வீட்டிக்கொள்ளும். பறவை வேறு செடிக் குச் சென்று அதன் பூவைக் கொத்தும் மூல போது, இம்மகரந்தம் அப்பூவின் சூலறையை அடைத்துவிடும். இவ்வாறு அதன் இனம் பெருகுகின்றது. புல்லுருவிகளினால் பயள் ஒன்றுமில்லை. மாறாக, இவை பயனுள்ள மரஞ்செடிகளில் வளர்ந்து அவற்றின் சத்துப்பொருள்களை உறிஞ்சி, அவற்றின் வளர்ச்சிக்கு ஊறு செய்கின்றன. புலாலுண்ணிகள் (Carnivores) : சிங்கம், புலி, ஓநாய் போன்ற விலங்குகள் பிற பிராணிகளை வேட்டையாடி அவற் றின் இறைச்சியை உண்கின்றன. இறைச்சி யைத் தவிர வேறு தாவரங்களையோ, தானியங்கலையோ இவை உண்பதில்லை. நாய், பூனை முதலியவை பால், சோறு போன்ற உணவுகளைச் சிறிதளவு உண்டா லும், பெரும்பாலும் இறைச்சி உணவையே விரும்புகின்றன. இவ்வாறு, இறைச்சியை மட்டும் அல்லது பெரும்பாலும் இறைச்சி உண்டுவாழும் விலங்குகளுக்குப் புலாலுண்ணிகள் என்று பெயர். யை புலாலுண்ணிகள் எல்லா விலங்குத் தொகுதிகளிலும் உண்டு. எனினும், குட்டி போட்டுப் பால்கொடுக்கும் பாலூட்டி களில்தான் (த.க.) இலை அதிகம். புலாலுண்ணிப் பாலூட்டிகளில் மிகப் பெரியது கொலைத் திமிங்கிலம். மிகச் சிறியது துன்னெலி (Mole ) . இது பூச்சி களை மட்டுமே தின்னும். இவ்வகைப் பிராணிகளைப் பூச்சிதின்னீகள் (Insectivores} என்றும் அழைப்பர். பறவைகளில் பல புலாலுண்ணி களாகும். ஆந்தை, கழுகு, பருந்து, காகம் போன்றவை எலிகளையும் கோழிக் குஞ்சுகளையும் பிடித்துத் தின்னும். கூழைக் கடா, மீன்குத்தி போன்ற பறவைகள் மீனை உண்டு வாழும். மரங்கொத்தி. தூக்கணங்குருவி போன்றவை பூச்சிகளை உண்கின்றன. ஊர்ந்துசெல்லும் பிராணிகளில் (Reptiles) பெரும்பாலானவை புலாலுண்ணிகள். இவற்றுள் முதலை முக்கியமானது. மலைப் பாம்பு சிறு பிராணிகளைப் பிடித்து நசுக் கிக் கொன்று தின்கிறது. தவளை, தேரை முதலியவை தலைப்பிரட்டை நிலையில் தாவரங்களை உண்ணும். முழுவளர்ச்சி