பதிலும்
29
பிற வஸ்துக்களிடமிருந்து பெறாமலும் பிராணவாயுவோடு சேர்ந்து எரியாமலும் தானாகவே உஷ்ணத்தை உண்டு பண்ணிக்கொள்கிறது. அது எரியாமல் உஷ்ணமாவதால் அணுவளவும் அழிந்து போவதில்லை. அத்தகைய ரேடியம் எந்த ஜலத்திலும் எந்த மண்ணிலும் அணுவளாகவேனும் காணப்படும் என்றம், அந்த ரேடியம் இருக்குமளவும பூமியின் உஷ்ணம் குறையாது என்றும் அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆகவே பூமியின் உட்புறமுள்ள நெருப்பு ஒரு நாளுமே அணையாது என்று கூறலாம்.
40 அப்பா! பூமி உருண்டையானாலும் ஆரஞ்சுப்பழம் மாதிரி காம்புப் பக்கமும் அடிப்பக்கமும் தட்டையாக இருப்பதாகக் கூறுகிறார்களே, அதை எப்படி அறிய முடியும்?
ஆமாம், பூமி வட துருவத்திலும் தென் துருவத்திலும் தட்டை தான், அப்படி தட்டையாய் இருப்பதாகச் சொல்வதற்குப் பல காரணங்கள் உள. செவ்வாய் சனி முதலிய இதர கோளங்களும் தட்டையாகவே இருக்கின்றன. அதனால் பூமியும் தட்டையாகத்தானிருக்கும் என்று எண்ணலாம். ஆதியில் பூமி திரவ ரூபமாக இருந்ததால், அது விரைவாகச் சுற்றி இறுகும் பொழுது நடுப்பாகத்தில் புடைக்கத்தானே செய்யும். அதுவும் தவிர பூமியின் மத்திய ரேகையில் ஒரு ராத்தல் நிறையுள்ள வஸ்துவை துருவத்தில் கொண்டு போய் நிறுத்தால் அதிக நிறையுள்ளதாகக் காட்டும். அதனால் பூமியின் மத்திக்கும் துருவத்துக்கும் சமீபம் என்று அறிந்து கொள்ளலாம். இந்தக் காரணங்களால் பூமி துருவங்களில் தட்டையாக இருப்பதாக அறிஞர்கள் தீர்மானிக்கிறார்கள்.
41 அப்பா! பூமி உருண்டையாய் இருப்பதாகக் கூறுகிறார்களே, அதை எப்படி அறிய முடியும்?
ஆமாம், தம்பி! பூமி நம் பார்வைக்குத் தட்டையாகத்தான் தோன்றுகிறது. ஆனால் கடற்கரையில் உட்கார்ந்து