இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மன்னன்_
இன்னும் இந்த உலகிலே
இருக்கும் நாடு யாவையும்
வென்று நானும் மகிழுவேன்;
வெற்றி முழக்கம் செய்குவேன்.
வேதாந்தி-
அதற்கு அப்பால்...? மன்னன்_
சொந்த நாடு திரும்புவேன்;
தோட்டம் ஒன்றின் நடுவிலே
சின்ன வீடு கட்டுவேன்;
திருப்தி யாக வாழுவேன்.
வேதாந்தி-
சொந்த காட்டில் சிறியதாய்த்
தோட்டம், வீடு அமைக்கவே
இந்த உலகம் முழுவதும்
ஏனோ வேண்டும் என்கிறாய்?
சின்ன வீடு கட்டியே
திருப்தி யோடு வாழவே,
இன்றே வேலை தொடங்குவாய்.
இன்பம் விரைவில் காணுவாய்!