பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னன்_

இன்னும் இந்த உலகிலே

இருக்கும் நாடு யாவையும்

வென்று நானும் மகிழுவேன்;

வெற்றி முழக்கம் செய்குவேன்.

வேதாந்தி-

அதற்கு அப்பால்...? மன்னன்_

சொந்த நாடு திரும்புவேன்;

தோட்டம் ஒன்றின் நடுவிலே 

சின்ன வீடு கட்டுவேன்;

திருப்தி யாக வாழுவேன்.

வேதாந்தி-

சொந்த காட்டில் சிறியதாய்த்

தோட்டம், வீடு அமைக்கவே

இந்த உலகம் முழுவதும்

ஏனோ வேண்டும் என்கிறாய்?

சின்ன வீடு கட்டியே

திருப்தி யோடு வாழவே,

இன்றே வேலை தொடங்குவாய்.

இன்பம் விரைவில் காணுவாய்!

38