பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படத்தில்,ரொட்டியின் மணமிருந்தால்
பார்த்துக் கொண்டா நாய்நிற்கும்?
உடனே ஓவியர் கனவானை
உற்றுப் பார்த்தார் சிரித்தபடி.

‘எப்படி உருவம் இருக்கிறது ?
இயல்பாய் இதுவும் இல்லையெனில்,
அப்படி நாயும் நக்கிடுமோ ?
அசலாய் உங்கள் உருவம்தான்'

என்றே ஒவியர் கூறியதும்,
ஏதும் கூற வழியின்றி
முன்னர் ஒப்புக் கொண்டபணம்
முழுதும் கொடுத்தார் அக்கனவான்!

57