பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-2.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருப்பதிமலைக்குச்செல்வதெனத்
தீர்மா னித்தார்,என்தந்தை.

என்னையும் அழைத்துச்சென்றிடுவீர்'
என்றே அவரை நான்வேண்ட

சரி'என அவரும் கூறினரே.
தந்தையும் நானும் புறப்பட்டோம்.

மலையில் ஏறிச் செல்லுகையில்
மயக்கம் எனக்கு வந்ததுவே.

களைப்பொடு மயக்கம் வருகிறது
. காலும் அத்துடன் வலிக்கிறது.

எத்தனை தூரம் இனியும்நாம்
ஏறிட வேண்டும்?' என்றேனே.

இன்னும் கொஞ்சம் தூரம்தான்.
ஏறிடு வா’யென அழைத்தனரே.


6