இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குழந்தை உலகப் பாடல்கள்
35
இது தவளைக்குக் கல்யாணம் நடந்தது போலச் சொல்லும் பாட்டு. குழந்தைக்குக் கல்யாணம் என்றால் ஒருவகைக் குதூகலம் உண்டாகும்படி செய்திருக்கிறார்கள் இந்த பாட்டில். அதனால்தான் குழந்தைப் பாட்டுக்களில் காக்காய் கல்யாணம், குருவி கல்யாணம், தவளை கல்யாணம் எல்லாம் வருகின்றன. இன்னும் கல்யாணங்கள் வரும் பாட்டுக்கள் சில வருமாறு:
- மொட்டைத் தலைக்கொரு பட்டுக் குல்லா
- மூளிக் காதுக்கொரு தென்னோலை
- ஆட்டுக் குட்டிக்குக் கல்யாணம்
- அழைத்து வாடி மொட்டையக்கா !
குழந்தைகள் பந்தாடும்பொழுது பாடும் பாட்டு இது.
- ஒரடி இரண்டடி
- மாணிக்கம் முத்தாடி
- ஜிமுக்கி சித்தாடை
- பாப்பாரத் தெருவிலே
- பாப்பாத்திக்குக் கல்யாணம்.
- பாப்பாரத் தெருவிலே
- ஒரடி இரண்டடி
- அம்மாப் பெண்ணுக்குக் கல்யாணம்
- அவாளவாள் ஆத்துலே சாப்பாடு
- கொட்டு மேளம் கோவிலிலே
- பாக்கு வெத்தலை கடையிலே
- பூ சந்தனம் பண்டாரம் வீட்டிலே
- அம்மாப் பெண்ணுக்குக் கல்யாணம்!