பக்கம்:குழந்தை உலகம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்லாங்காய் விளையாட்டு

45

 ஏதாவது பேசிக்கொண்டிருந்தால் அதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுவாள். தன்னை அறியும் தறுவாயில் இருப்பவள். தாய் மையெழுதித் தலையைக் கோதிப் பின்னி முத்துமாலை பூட்டி அலங்கரித்தால், பேதையைப் போல ஓடாமல், நின்று அவற்றை ஏற்றுக்கொள்வாள்.

இத்தகைய இயல்புடைய பெதும்பையானவள் கழற்சிக்காயைப்போல உள்ள கழங்குகளை எடுத்து விளையாடலானாள். விளையாடும் போது பாட்டுப் பாடுகிறாள். ஏழு கழங்குகளை வைத்துக்கொண்டு ஆடுகிறாள். ஒன்றைக் கீழே வைத்தெடுத்துப் பிறகு இரண்டை வைத்து எடுக்கிறாள். இப்படியாக ஏழுவரைக்கும் எடுத்து விளையாடுகிறாள். ஒவ்வொன்றையும் எடுக்கும்போது அவள் பாடும் பாட்டில் ஒன்று இரண்டு மூன்று என்று ஏழுவரையில் கணக்கு வருகிறது. திருக்காளத்தி நாதருடைய புகழோடு சம்பந்தப்பட்ட செய்திகளை வைத்து அவள் பாடுகிறாள்.

அந்த ஸ்தலத்தில் கல்லால விருட்சம் சிவபிரானுக்கு நிழல் தருவது. காளஹஸ்தீசுவரருக்கு அஞ்சுகொழுந்து என்பது ஒரு பேர். கண்ணப்பநாயனர் முதலிய ஏழுபேர் அங்கே பூஜை செய்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் வைத்துப் பெதும்பை பாடிக் கழங்கு விளையாடுகிறாள்.

ஒன்று: உலகமெலாம் ஒடுங்கிடினும்
உயர்ந்த கல்லால் ஒன்று.
இரண்டு : அடியவர்கள் ஈடேற
அருள்செய்யும் பாதங்கள் இரண்டு.
மூன்று : மூவர் சொல்லும் தேவாரத்
தமிழ்வேதம் ஆகியவை மூன்று
நாலு : ஈசனேயே போற்றிசெய்யும்
எழிலுடைய வேதங்கள் நாலு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/54&oldid=1048090" இலிருந்து மீள்விக்கப்பட்டது