பக்கம்:குழந்தை உலகம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பொரியரிசியின் கதை

ஒரே ஒரு பொரியரிசி கல்யாணம் பண்ணிக்கொள்ள வேணுமென்று ஆசைப்பட்டதாம். அது தன்னக் தானே பார்த்துக்கொண்டது. உருண்டு திரண்டு புஷ்டியாகவும் வெளுப்பாகவும் இருக்கும் தனக்கு அழகான புருஷன் வேணுமென்று எண்ணியது. தான் அழகியாக இருக்கும் போது அழகில்லாத புருஷனுக்கு வாழ்க்கைப்படலாமா? ஊர் முழுவதும் தேடித்தானே புருஷனைக் கண்டு பிடிக்க வேண்டுமென்று புறப்பட்டது. அதற்குத் தாயும் இல்லை: தகப்பனும் இல்லை.

சின்னச் சின்னக் கையும் காலும் அசைய, அது ஊரைச் சுற்றப் புறப்பட்டது. யாரோ ராஜா சண்டை யில் வெற்றியை அடைந்து ஊருக்குத் திரும்பிக்கொண் டிருந்தான். அவனுடன் யானை, குதிரை, ஒட்டகம் முத விய படைகளும் வந்தன. பொரியரிசி வந்துகொண் டிருக்தபோது எதிரே அரசனுடைய யானே ஒன்று வக் தது. பொரியரிசி விசுக் விசுக்கென்று வந்ததை அந்த யான பார்த்தது. அதற்கு மிகவும் விநோதமாக இருக்

கது. - -

“g பொரியரிசி, பொரியரிசி, எங்கே இவ்வளவு உற்சாகமாகப் புறப்பட்டாய்?" என்று அதைப் பார்த்து யான கேட்டது. உடனே பொரியரிசி, கான் கல் யாணம் பண்ணிக்கொள்ளப் போகிறேன். அதற்காக மாப்பிள்ளை தேடிக்கொண்டிருக்கிறேன்' என்று சொல்லி - والتأثير للا

'அப்படியானுல் என்னேக் கல்யாணம் பண்ணிக் கொள்ளேன்' என்று யான கேட்டது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/93&oldid=555210" இலிருந்து மீள்விக்கப்பட்டது