உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தை செல்வம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

குழந்தைச் செல்வம்


அரசர் மார்பில் ஆரத்தை
      ஆரோ கொண்டு போனாராம்;
திருடிச் சென்றார் எவரம்மா?
       தெரியு மானால், சொல்லம்மா! 7

9. கூண்டுக் கிளி

சிறுவன்

பாலைக் கொண்டு தருகின்றேன்,
      பழமும் தின்னத் தருகின்றேன்;
சோலைக் கோடிப் போகவழி
      சுற்றிப் பார்ப்பதேன் கிளியே? 1

காட்டில் என்றும் இரைதேடிக்
     களைத்திடாயோ? உனக்கிந்தக்
கூட்டில் வாழும் வாழ்வினிலே
     குறைகள் ஏதும் உண்டோ? சொல். 2

கிளி

சிறையில் வாழும் வாழ்வுக்குச்
     சிறகும் படைத்து விடுவானோ?
இறைவன் அறியாப் பாலகனோ?
     எண்ணி வினைகள் செய்யானோ? 3

பாலும் எனக்குத் தேவையில்லை ;
     பழமும் எனக்குத் தேவையில்லை ;
சோலை எங்கும் கூவி நிதம்
     சுற்றித் திரிதல் போதுமப்பா! 4