இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10. பசு
பச்சைப்புல்லைத் தின்று, வெள்ளைப்
பால் தர, நீ என்ன
பக்குவஞ் செய்வாய்? அதனைப்
பகருவையோ? பசுவே!
உச்சியுடல் நக்கி, ஈன்ற
உடன், உனது கன்றை
உயிரெழுப்பும் மாயம் எதோ?
உரைத்திடுவாய், பசுவே!
1
வாய்க்கினிய பால் தருவாய்;
வயற்குரமும் தருவாய்;
வண்டிகட்டக் காளையும் நீ
வளர்த்தளிப்பாய்,பசுவே!
தாயில்லாப் பிள்ளைகட்குத்
தாய் ஆவாய்; நோயால்
தளர்பவர்க்கு மருத்துவச்சி
தானாவாய்,பசுவே!
2
11. பால்
அம்மா பாலைக் கறந்திடுவாள்.
பாலைக் காய்ச்சி ஆறவைப்பாள்;
ஆறின பாலில் உறைவிடுவாள்.
உறைவிட்ட பால் தயிராகும்;
தயிரைக் கடைந்தால் மோராகும்,
மோரில் வெண்ணெய் படர்ந்துவரும்;
வெண்ணெயை உருக்கினால் நெய்யாகும்.
நெய்யில் அப்பம் சுட்டிடலாம்;
நீயும் நானும் தின்றிடலாம்.