இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
44
குழந்தைச் செல்வம்
ஓடும் உதிரத்தில் - வடிந்து
ஒழுகும் கண்ணீரில்,
தேடிப்பார்த்தாலும் - சாதி
தெரிவதுண்டோ அப்பா?
10
பிறப்பினால் எவர்க்கும் - உலகில்
பெருமை வாராதப்பா!
சிறப்பு வேண்டு மெனில் - நல்ல
செய்கை வேண்டும். அப்பா!
11
நன்மை செய்பவரே - உலகம்
நாடும் மேற்குலத்தார்;
தின்மை செய்பவரே -அண்டித்
தீண்ட ஒண்ணாதார்.”
12
சிறுவன் பால் தருதல்
நிலத்துயர் ஞானி-இவை
நிகழ்த்தி, ”என் தம்பீ!
கலத்தினிலே கொஞ்சம்-பாலைக்
கறந்து தா” என்றான்.
13
ஆயர் சிறுவனும் - கலத்தில்
அளிக்க வாங்கியுண்டு,
தாயினும் இனியன் - கொண்ட
தளர்ச்சி நீங்கினனே.
14