பஞ்சாமிர்தம்
47
செந்நெற் பயிர் அலை மோதும் நாடு - வாழை
தென்னை கமுகு செழிக்கும் நாடு;
மன்னிய முல்லை மருக்கொழுந்தின் - நல்ல
வாசம் எழுந்து கமழும் நாடு.
6
காடு மலையெல்லாம் மேய்ந்துவந்து - பசு
கன்றினை ஊட்டிக் களிக்கும் நாடு ;
ஆடுகள் மந்தையாய் வாழும் நாடு - கண்ணுக்கு
ஆனந்தக் காட்சி யளிக்கும் நாடு.
7
தேவர் திருக்கோவில் ஓங்கும் நாடு - மேழிச்
செல்வர் பதிகள் சிறக்கும் நாடு;
மூவர் தமிழும் முழங்கும் நாடு - திரை
மூத்தினை வீசிக் கொழிக்கும் நாடு.
8
வெற்றி சுதந்திரம் வேண்டும் நாடு - சாதி
வேற்றுமை என்றும் வெறுக்கும் நாடு;
ஒற்றுமை யாக ஒழுகும் நாடு - தேச
ஊழியத் தாலே உயரும் நாடு.
9
தென்றல் உலவித் திரியும் நாடு-உடற்
சீக்கெலாம் ஓட்டித் துரத்தும் நாடு;
என்றும் தழைத்தறம் ஏறும் நாடு - வையத்து
ஏதும் இணையிலா நாஞ்சில் நாடே
10