பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒரே குழந்தை

63

அது எதற்கெடுத்தாலும் பிறரை எதிர்பார்க்கவே எண்ணம் கொள்கிறது; தானே அதைச் செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை அதற்கு ஏற்படுவதில்லை.

ஆதலால், மற்றக் குழந்தைகளோடு பழகுவதற்கு அதற்கு வசதி செய்து கொடுக்கவேண்டும். குழந்தைப் பள்ளிகள் இதற்குச் சிறந்த சாதனங்கள். அங்கே பெற் ருேர்களின் அர்த்தமற்ற அன்பும் செல்லமும் கவனமும் இல்லை. பிற குழந்தைகளின் சேர்க்கை நிறைய உண்டு. அவர்களோடு பல மணி கேரம் இருப்பதால் கூடிக் காரியம் செய்யவும், விளையாடவும், பிறரை அதுசரித்து கடக்கவும் அக்குழந்தை கற்றுக் கொள்ளும். உலகமானது தனது வீட்டைப் போலவே தன் விருப்பப்படி இருக்காதென்ற உணர்ச்சியும் மெதுவாக உண்டாகும்.

எதிர் வீட்டிலே ஒரு பையன் இருக்கிறான். ஒரே பையன். அவனுக்கு ஏதாவது வேண்டுமென்றால் அம்மாளைக் கூப்பிடத்தான் தெரியும்; அம்மாள் வரக் கொஞ்சம் தாமத மேற்பட்டாலும் உடனே அழத்தான் தெரியும். அவனுக்கு வேண்டிய தெல்லாவற்றையும் அவனுடைய தாயே செய்துவிடுகிறாள். அவன் ஒடக்கூடாது; ஒடினால் விழுந்து காயமாகிவிடுமே! ஒவ்வொரு வேளையும் அவனைச் சாப்பிடும்படி செய்வது ஒரு பெரிய பிரயத்தனம். சரியானபடி உணவருந்தாது உடம்பு இளைத்துவிடுகிறதே என்று தாய்க்குப் பெரிய கவலை. அதை அவன் தெரிந்து கொண்டிருக்கிறான்.

வாழ்க்கையிலே இப்படி யெல்லாம் யார் இவனிடம் அக்கறையும், அநுதாபமும் கொள்ளப் போகிறார்கள்? வாழ்க்கை யென்பது உறுதியோடும், தன்னம்பிக்கை யோடும் போராடுபவனுக்கே வெற்றி கொடுக்கும். இவன் பிறரையே எதற்கும் எதிர்பார்த்து நிற்பான். தனக்கு