இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கெடிலக்கரை அரசுகள்
163
என்னும் கல்வெட்டுப் பகுதியால் அறியலாம். இக் கல்வெட்டிலுள்ள ‘அதிவீர ராமரான பூரீவல்லபதேவர்’ என்னும் தொடர் குறிப்பிடத்தக்கது. ரீவல்லபன் என்பதுதான், சீவல்லபன், சீவலவன், சீவலன் எனப் படிப்படியாகத் தமிழில் மருவியது எனவே, தமிழ் நாவலர் சரிதையில் குறிக்கப்பட்டிருக்கும் சீவலன் அதிவீர ராம பாண்டியனே என்பது தெளிவு. இவனுக்கு வீரமாறன், இராமன் முதலிய பெயர்களும் உண்டு. வீரமாறன், இராமன் என்னும் பெயர்கள், சீவலன் என்னும் பெயருடன் இணைப்பாகத் தமிழ் நாவலர் சரிதைப் பாடல்களில் ஆளப்பட்டுள்ளதால், ஏகம்ப வாணனுடன் பிணங்கிய பாண்டியன் அதிவீரராமனே என்பது முழுத் தெளிவு. இப் பாண்டியனது ஆட்சிக்காலம் 1564 முதல் 1603வரை ஆகும்; எனவே, ஏகம்பவாணனது காலம் பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பது போதரும்.