இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
468
கெடிலக்கரை நாகரிகம்
- கு : வரமாட்டேன் போ
- பை : மரங்கொத்திக் குருவி
- கு : ஏன் ஏன் ஏன்
- தலையை நோவுது - தலைக்காணி போட்டுக்கோ
- பாக்கு வேணும் பல்லைத்தட்டிப் போட்டுக்கோ
- வெற்றிலை வேணும் - வேப்பிலையைப் போட்டுக்கோ
- புகையிலை வேணும் - குதிரைவாலைப் போட்டுக்கோ
- சுண்ணாம்பு வேணும் சுத்திசுத்தி ஒடிவா!
- மரங்கொத்திக் குருவி ஆஅ ஒஒ!’
ஒருவர் பின் வரிசையாக நிற்கும் மற்றவரை இன்னொருவர் பிடிக்கும் விளையாட்டின்போது ஒருவர்க் கொருவர் மாறிமாறிப் பாடுவது:
- ஆடு பிடிப்பேன் கோனாரே
- ஏன் பிடிப்பே நாட்டாரே
- கோழி பிடிப்பேன் கோனாரே
- ஏன் பிடிப்பே நாட்டாரே
- அடுப்பின் மேலே ஏறுவேன்
- துடுப்பாலே அடிப்பேன்
- ஊசி போட்டேன் - ஊதி எடு
- காசு போட்டேன் - கண்டு எடு.”
பிள்ளைகள் வட்டமாக அமர்ந்திருப்பார்கள்; ஒருவன் தன் கையில் ஒரு சிறு துணியைப் பந்துபோல் சுற்றி வைத்துக் கொண்டு வட்டத்தைச் சுற்றி வருவான். அப்போது அவன் ஒரு பிள்ளையின் முதுகின் பின்னால் துணியைத் தெரியாமல் வைப்பான். உடனே அந்தப் பிள்ளை தன் பின்னால் துணி வைத்திருப்பதைத் தெரிந்து கொண்டு அதைத் தான் எடுத்துக்கொண்டு சுற்றி வரவேண்டும். இவ்வாறு சுற்றி வருபவர்கள் பாடும் பாட்டாவது:
- "திரிதிரிபந்தம் - திருமால் பந்தம்
- திரும்பிப் பார்த்தால் ஒரு கொட்டு
- திரிதிரி பந்தம் - திருமால் பந்தம்
- திரும்பிப் பார்த்தால் ஒருகொட்டு’