பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

478

கெடிலக்கரை நாகரிகம்



ஆளா பொறுக்கி ஆசாரக் கள்ளி
துக்கம் துளசி பொறிவிளங்கா நாச்சி
விளையாடா நல்லாள் ஊஞ்சல் தாலாட்ட
இரட்டை இணைச்சிக்கோ தாவி அணைச்சிக்கோ
தட்டாரக் கோவிலிலே தாலி பிரிச்சிக்கோ.

4

"நாங்கள் சிங்கல் ஆடவே
ராயர் பட்டணம் கட்டவே
பட்டணத்தான் செட்டி மகன்
பாக்குத் தின்று பறிபோனான்

நாங்கே நீ நடந்துவா பாம்பேநீ படர்ந்துவா
அஞ்சிலே பிஞ்சி அவளுட நெஞ்சி
ஆக்கூரு வாசலிலே பாக்கை வெட்டிப் பந்தலிட்டான்.

ஏழைப் பெண்ணு எங்க பெண்ணு
மோரு விக்கிற மொட்டப் பெண்ணு
தயிரு விக்கிற தர்மப் பெண்ணு.

எட்டால் அடிச்சான் செட்டி மகன்
இடிஇடிச்சான் ராசா மகன்.

கோங்கா நங்கா வடிவச்சி
குண்ட லுரு தாதச்சி - இந்தாடி ஆயா
உன்பேரன் பொறந்தான் பார்த்துக்கோ
பழம் கொடு திருப்தியா நான் வருவேன்.

கட்ட வச்சவ யாரடி
லவுட்டு அடிச்சவ யாரடி
கட்டை கட்டை ஒன்று
கருவங் கட்டை இரண்டு
வேலங் கட்டை மூன்று
விறகு ஒடிக்கப் போனேன்
கத்தாழை முள்ளு - கொத்தோடு தச்சிது.
கீழ்க்கண்ணன் வெள்ளாழக் கீழண்டைத் தெருவிலே
சின்னண்ணன் பெண்டாட்டி சிறுக்கி சண்டை போட்டாளாம்
அப்போது பெரியண்ணன் அலறி அலறி அழுதானாம்."