பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்களும் வாழ்க்கை முறையும்

479



“அல்லலேகு முத்தண்ணா ஆனைத்தடி யண்ணா
குள்ள நரியண்ணா கோவைப் பழமண்ணா
பொறுக்கி கிட்டே போனேன் பொங்கல் சோத்தைப் போட்டாள்
வாவென அழைச்சாள் வண்ணத் தடுக்கிட்டாள்
குத்துப் பருப்பிட்டாள் கூசாமல் நெய்விட்டாள்.

ஈரி குத்துற மாதுளை இலை பறிக்கிற தூதுளை
மணத்தக் காளி வேதளை.

முக்கோட்டு சிக்கோட்டு ராவணா
முத்து சரவணா.

நாங்குத்தி நல்லம்மா நடந்து வா கண்ணம்மா.
அஞ்சு களாக்காய் தும்பைப் பூ
அறுத்து கொட்டடி பண்ணைப் பூ.

ஆறுன்னா ஆறலியே அவிச்சா தணியலியே.
ஏழம்பூ தாழம்பூ ஏரிக்கரை சித்தம்பூ
காசிக்குக் களம்பூ.

கீழ்காணி மேல்காணி கீழே சுரக்காணி
கண்ணிரண்டும் கறப்பாள் கறந்ததைக் குடிப்பாள்.

அக்காடி அக்காடி அத்தானுக்கு என்னகறி
ஊசிப் பலாக்கொட்டை உசுட்டேரி மாங்கொட்டை
காட்டு மரவட்டை போட்டுக் குழம்பிட்டேன்."

8

"நாரத்தம் பழமே நான் வளர்த்த செல்வமே
நான் செத்துப் போனால் நீ எங்கே இருப்பாய்
ஆத்தங்கரை ஓரத்திலே அழுதுகொண் டிருப்பேன்
சித்தாத்தா வருவாள் சீத்தாப்பழம் தருவாள்
பெரியாத்தா வருவாள் பிரப்பம்பழம் தருவாள்
கப்பல்காரன் வருவான் கப்பல் ஏற்றிப் போவான்."

9

7. ஏற்றப் பாட்டு

ஏற்றப் பாட்டு முழுமையும் போடுவதென்றால் ஒரு தனி நூல்போல் விரியும். அதனால், மாதிரிக்காக ஒருசில பகுதிகள் மட்டும் வருமாறு: