480
கெடிலக்கரை நாகரிகம்
"வள்ளியாரே பாடும் - பிள்ளையாரே வாழி
பிள்ளையாரே வேலும் - பிழைவராமல் காரும்
மழைவரக் கண்பாரும் மகாதேவா பாரும்
கந்தன் அருளாலே கனகவல்லி தாயே
காரும் இந்தவேளை கால்களே நோவாதே
கால்கை நோவாதே கண்ணாறு வராதே
எங்களைக் காரும் எழுந்தருள் தேவி
ஒன்னுடைய ராமா
இரண்டுடைய ராமா
மூனுடைய ராமா
நாலுடைய ராமா
நாலு பிள்ளையாரே நாவல்மரம் பாரே
ஆரை மறந்தாலும் ஐயனாரை மறவேன்
பேரை மறந்தாலும் பெருமாளை மறவேன்
புத்தி மறந்தாலும் பத்தி மறவேனே
பத்தி மறந்தாலும் கீர்த்தி மறவேனே
கீர்த்தி மறந்தாலும் கினவு மறவேனே
கினவில் மறந்தாலும் நினைவில் மறவேனே
ஐந்துடனே வாழி ஆறுடனே வாழி
ஏழுடனே வாழி எட்டுடனே வாழி
எட்டியடி வச்சேன் கட்டிச்சு பெருமாளே
தாவியடி வச்சேன் தாங்குது பெருமாளே
ஓங்கியடி வச்சேன் ஓடுது பெருமாளே
ஒண்ணேருட வாழி இருபதியா லொன்று."
மேலுள்ள ஏற்றப் பாட்டு, இந்தப் பகுதியில் பல இடங்களிலும் பாடப்படும் ஏற்றப் பாட்டின் தொடக்கப் பகுதியாகும். இனி, ஏற்றப் பாட்டின் நடுநடுவே பாடப்படும் சில அடிகள் வருமாறு:
'ஏண்டி யம்மா பெற்றாய் ஏத்தக் கட்டை தொங்க'
'எருமுட்டையில் பாம்பு இட்டிடுங்காண் தீம்பு'
'மாமனுக்கு ஒண்ணு மரக்காலாட்டம் பெண்ணு'