அட்டெண்டர் ஆறுமுகம்
"என்ன உத்தியோகம் சார், இது? பத்து வருசமா நானும் அட்டெண்டராத்தான் இருக்கேன்; நீங்களும் ஹெட்கிளார்க்காகவே இருக்கீங்க. சலிச்சுப் போகல்லே? உத்தியோகத்தை ஒசத்திப்போடச் சொல்லுங்க, சார்!" என்பான் அட்டெண்டர் ஆறுமுகம்.
"போடா, தூங்குமூஞ்சி! நீ செய்யற வேலைக்குப் பிரமோஷன் வேறே ஒரு கேடா?" என்பார் ஹெட்கிளார்க்.
"அட, நீங்க ஒண்ணு. எனக்குச் சொல்லலே, சார்! உங்களுக்குத்தான் சொன்னேன்; ஏதோ குழந்தை குட்டிங்களை வெச்சுகிட்டுப் பத்து வருசமா இப்படியே கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கீங்களேன்னு சொன்னா..."
"ஆமாம், நீ பெரிய குபேரன்; உனக்கு இந்த அட்டெண்டர் வேலையே போதும்."
"எனக்கெதுக்கு சார்? ஓட்டலுக்குப் பால் சப்ளை பண்றேன். விடியக்காலம் மூணு மணிக்கே எழுந்துபோய் மாட்டைக் கறக்கணும். அதான் கொஞ்சம் தொந்தரவு.சரியாத் தூங்க முடியலே.தூக்கம் கெட்டுப்போவுது."
அதான் ஆபீசுலே வந்து நிம்மதியாத் தூங்கறயேடா சோம்பேறி!"