பக்கம்:கேரக்டர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

யிருந்த ஜல்லிக் கல்லெல்லாம் தீர்ந்து போயிட்டுது. அத்தோடாவது சண்டையை நிறுத்தினாங்களா? இரண்டு கட்சிங்களும் சண்டை போடறதுக்காக ஜல்லிக் கல் கொட்டியிருக்கும் பக்கமாவே போயிகிட்டிருக்காங்க. இதுவரைக்கும் முந்நூறு பேருக்கு மேலே பலத்த அடி. நாலு பேர் மண்டை உடைஞ்சு செத்துட்டாங்க. அடிப்பட்டவங்களுக்கு ராயப்பேட்டை ஆஸ்பத்திரியிலே இடம் போதாமல், ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு வேறே தூக்கிட்டு போறாங்க, சார்! ராயப்பேட்டை ரோடு முழுதும் 'ஜே ஜே' என்று கூட்டம். இதுக்காகப் போலீசார் வேறே அந்தப் பக்கமா யாரையும் விடறதில்லை.நான் இப்போ அங்கிருந்துதான் சார் வாரன்' என்று பயங்கரமாக ஒரு செய்தியை அவிழ்த்துவிடுவான்.

ராயப்பேட்டைப் பக்கம் போய்ப் பார்த்தால் அங்கே சண்டையும் இருக்காது. மண்டையும் உடைந்திருக்காது. இரண்டு பிச்சைக்காரர்களுக்குள் பஸ் ஸ்டாண்டில் ஏதாவது தகராறு நடந்திருக்கும். போலீசார் வந்து அவர்களைப் பிடித்துக்கொண்டு போயிருப்பார்கள். அவ்வளவுதான்; சொக்கப்பன் அதையே அரசியல் கட்சிச் சண்டையாக மாற்றிப் பிரமாதமாக வர்ணித்து விட்டிருப்பான்.

திடீரென்று ஓடி வந்து, "புழலேரி உடைத்துக்கொண்டு விட்டது. மவுண்ட்ரோடு பக்கம் வெள்ளம் வந்துக்கொண்டிருக்கிறது" என்று ஒரு புரளியைக் கிளப்பிவிடுவான். அந்தச் செய்தி கேட்டு மவுண்ட் ரோடே அல்லோல கல்லோலப்படும். அடுத்தாற்போல் மயிலாப்பூருக்குப் போய், "வெள்ளத்தில் மவுண்ட்ரோடு பூராவும் முழுகிவிட்டது. எல்.ஐ.சி. கட்டடத்தைத் தவிர எல்லாம் போய்விட்டது" என்பான்.

அங்கிருந்து இன்னோர் இடத்துக்குப் போவான். அங்கே யாராவது குப்பை மேட்டுக்குத் தீ வைத்துக் கொளுத்திக் கொண்டிருப்பார்கள், அதைக் கண்டுவிட்டுத் தெரிந்தவகளிடமெல்லாம் ஓடிப்போய், "சார்; பழைய மாம்பலத்தில் ஒரு தெருவே தீப்பிடிச்சு எரியுது, சார். பெரிய தீ விபத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/46&oldid=1479353" இலிருந்து மீள்விக்கப்பட்டது