பக்கம்:கேரக்டர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



48

ஒரு டஜன் பயர் என்ஜின் வந்து தீயை அணைச்சுக்கிட்டிருக்குது. ஆனா இன்னும் தீ அடங்கின பாடில்லே" என்பான்.

அங்கிருந்து சீட்டாடும் கிளப்புக்குப் போய், மதுரையில் அனிதா போஸைப் பார்க்க, சுபாஷ்சந்திர போஸ் வந்திருப்ப தாக ஒரு 'டூப்' விடுவான்.

"நீ நேரில் பார்த்தாயா?" என்று கேட்டால், "பார்த்தேனா? அவரோடு பேசினேன். முத்துராமலிங்கத் தேவர்கூட என் அருகில் இருந்தாரே!" என்பான்.

  • சுபாஷ் போஸ் என்ன சொன்னார்?" என்று கேட்டால் 'இனி இந்தியாவிலேயே தங்கிவிடப் போவதாகவும் சுதந்திரா பார்ட்டியில் சேர்ந்துவிடப் போவதாகவும், சொன்னார்' என்பான். அப்புறம் நாலைந்து நாளைக்கு சொக்கப்பனே கண்ணில் தென்பட மாட்டான். சுபாஷ்போஸ் மறைந்தது போல் அவனும் எங்காவது மறைந்து விடுவான்!

அவன் திரும்பி வந்தபிறகு, "சொக்கப்பா! எங்கே உன்னைக் கொஞ்சநாளாகக் காணோம்? எந்த ஊருக்குப் போயிருந்தாய்?" என்று கேட்டால், "பங்களூருக்குப் போயிருந்தேன். உங்களுக்குத் தெரியாதா சமாசாரம்?" என்று கேட்டு விட்டு நம் காதோடு ஏதோ ரகசியத்தைச் சொல்ல வருவான்.

"பங்களூர்லே பாங்க் ஒண்ணு குளோஸ் ஆகப் போறதுன்னு எனக்கு ஒரு ஸீக்ரெட் இன்பர்மேஷன் கிடைச்சுது. உடனே போய் அந்த பாங்கியிலிருந்த என் பணம் பூரவையும் திருப்பி வாங்கிண்டு ராத்திரியோடு ராத்திரியா கார்லேயே திரும்பி வந்துட்டேன். அப்புறம் கேளுங்கோ. கையிலேயோ பத்தாயிரம் ரூபா காஷ்! கார் சித்தூரைத் தாண்டி நடுக்காட்டிலே வந்துகிட்டிருக்குது. நல்ல இருட்டு! நான் ஒண்டி ஆள். திடீர்னு ஏழெட்டு ஆசாமிங்க கம்பும் கழியுமா காருக்குக் குறுக்கே வந்து. வழிமறிச்சுட்டாங்களே, பாாக்கலாம். எனக்கு எப்படி, இருக்கும்? காரெல்லாம் சோதனை போட்டாங்க. கடைசியிலே பணப்பையை எடுத்துப் பார்த்துட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/48&oldid=1479355" இலிருந்து மீள்விக்கப்பட்டது