பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

総務

இருளுள் மறைந்து சில கிமிடங்களுக்குப் பிறகு வெளிப் பட்டு வந்து பையன் கையில் கற்றையாய் கோட்டுக்களைத் திணித்தார். அவன் எண்ணக்கூட இல்லை. உடனே போய் விட்டான்.

பொம்மலாட்டம்.

'ஸார் என்னன்னு பார்க்கிறீங்களா?”

4

எனக்கின்னும் ஊடல்தணியவில்லை. நான்ஒண்னும் பார்க்கல்லே. எனக்கென்ன வந்தது?’ என்று எனக்கே முனகிக் கொண்டேன்.

“ஒரு ரொடேசன், எதிர்ச்சாரியில் ஒரு வெற்றிலை வியாபாரி, பாய். இப்படி மாதத்தில் ஒருமுறை, இருமுறை, அஞ்சு, பத்து, பெரிசு உதவுவார். இரண்டு மூணு காளைக்கு; மிஞ்சிப் போனால் ஒருவாரம்.

'வெற்றிலையில் அவ்வளவு பிரளுமா T6767?'

'வெட்கக்கேடு! இந்தச் சீமையில் சோறு, தண்ணி இல்லாமல் இருந்தாலும் இருப்பா. வெற்றிலையும், புகை யிலையும் இல்லாமல் முடியாது. ஏற்றுமதி வேறு, எக்கச் சக்கம். இராக், குவாய்ட், ஈரான், அங்கே போய்ச் சேரு வதற்குள் எவ்வளவு அழுகலோ. வாடலோ அவங்களுக்கே வதங்கல் வெற்றிலைதான் பிடிக்கும் என்கிற அளவுக்கு வெளியூர் காக்கையே இவர் கட்டில் அடக்கி வெச்சிருக்கார். இவருக்கே வெற்றில்ைத் தோட்டம் ஏக்கர் கண்க்கில் ஓடுது. அதுவும் பத்தல்லே, கூடைகூடைய சரக்கு வேறே தினம்