பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

சுட்டு விரலுக்கும் கட்டை விரலுக்குமிடையே ஒரு தானை இடுக்கிக் கொண்டு மேல் காரப்பூச்சை உர்ஸ் வழித்துக் கொண்டிருக்கையில் அந்தக் கிழங்கு திடீரென அவள் பிடியினின்று வழுக்கிக் கவண் போல் புறப்பட் ப்ரபுவின் கலத்தில் சொதக் கென்று விழுந்தது. ப்ரபு சடக்கென்று அதையெடுத்து விழுங்கி விட்டான்.

ஒரே உருட்டுச் சிரிப்பு. என்னையும் மதுரத்தையும் தவிர, ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு திருதிரு வென்று விழிக்கிறோம். எங்களால் வேறு என்ன செய்ய முடியும்?

எச்சில் எச்சில் என்பீர் ஏதும் கெட்டமானிடரே

உங்கள் அருவருப்புக்களே பாசாங்குகள்.

பெரியவர்களின் அகந்தைகள் என்று இளைய தலை முறை கிரூபனை செய்ய ஆரம்பித்து விட்டால் எங்கள் மானம் எங்கே போகிறது: வயது ஏற ஏற, சொல் தாங்கு வது கஷ்டமாயிருக்கிறது.

ძ% દે ၀ိ

கரை மறைந்த அசதிக் கடல்.

இன்று வானத்தில் அலாதி தெளிவு. மத்தாப்பு கொள்ளையாக கொட்டியிருக்கிறது. -

உண்ட சுகம் கண்ட

இன்ப அசதிக் கடல்.

இந்த சமயத்துக்கு எனக்கு பூமியில் யாரும் எதுவும் பகை கிடையாது.

அரைக்கண் செருகலுல் வான விளிம்புக்கே மிதந்து செல்கிறேன்.