இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
30
உமா : ஆமாம், நான் நாலு கேள்விகள் கேட்பேன்; நாலுக்கும் தப்பு தப்பா விடை சொல்லனும்: என்றேன். முதல் மூனுக்கும் தப்பா விடை சொன்னாய், ஆனால், நாலாவது கேள்வி என்ன? இப்போ இதுவரை நான் எத்தனை கேள்விகள் கேட்டிருக்கிறேன்' என்பது தானே? அதற்கும் நீ தப்பு விடைதானே சொல்லனும்? சரியான விடையைச் சொல் லிட்டியே..அதனாலே
கனகசபை: ஆமாம்; விஜி தோத்துப் போயிட்டா
யாழினி: விஜி தோத்துப் போகல்லே, ஏமாந்து போயிட்டா
(எல்லாரும் சிரிக்கிறார்கள்.)