இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34
எல்லோரும் : (மெளனம்).
சரளா : ஒருவருக்கும் தெரியவில்லையா? சரி, நானே சொல்லிவிடுகிறேன். அதன் பெயர் மகாவலி கங்கை. இப்போது நான் ஒரு விடுகதை போடப் போகிறேன்.
கால் உண்டு; நடக்கமாட்டான்.
கை உண்டு, மடக்க மாட்டான்.
முதுகு உண்டு; வளைக்க மாட்டான். அவன் யார்?
கிரி: சட்டை. சரளா : சட்டைக்குக் கால் உண்டா? பிரீதி : நான் சொல்கிறேன். நாற்காலி!
சரளா: பிரிதி சரியாகச் சொல்லிவிட்டாள். சோவியத் ரஷ்யாவின் தந்தை என்று போற்றப்படுகிறவர் லெனின் என்பது உங்களுக்குத் தெரியும். அவருக்கு அவருடைய பெற்றோர் இட்ட பெயர் தெரியுமா?
கிரி : எனக்குத் தெரியும். முந்தாம் நாள்தான் லெனினின் இளமைப் பருவம்' என்ற புத்தகத்தைப் படித்தேன். விளாடிமிர் இலீயச் உலியனாவ்.
சரளா : அடேயப்பா! நன்றாக இவ்வளவு நீளப் பெயரை நினைவு வைத்திருக்கிறாயே! ஜைன மதம், சமண மதம் இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?