62
ரவி : சென்னை, டில்லி, பம்பாய்.
இரத்தின: . ரவி சொன்ன பதிலில் முதலும் கடைசியும் சரியே. ஆனால் நடுவே சொன்னது தான் தவறு
சதீஷ் : நான் சரியாகச் சொல்கிறேன். கல்கத்தா.
இரத்தின: கரெக்ட்! டெலிபோனைக் கண்டு பிடித்த அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் எந்த நாட்டில் பிறந்தவர்?
விஜி : எடின்பரோவில்,
இரத்தின : எடின்பரோ என்பது அவர் பிறந்த நகரம். ஆனால், எங்த நாட்டில் அவர் பிறந்தார் என்றல்லவா கேட்டேன்? எடின்பரோ எந்த நாட்டின் தலைநகரம்?
விஜி ; ஸ்காட்லாந்து காட்டின் தலைநகரம்
இரத்தின : விஜி சொன்ன விடை சரியே... கடைசியாக ஒரு கேள்வி. 4 கிலோ மீட்டர் துரத்தைக் கடக்க ரவிக்கு ஒரு மணி நேரமாகிறது. ரவி, சதீஷ் இருவரும் சேர்ந்து அதே துாரத்தைக் கடக்க எவ்வளவு நேரமாகும்:
சதீஷ் : அதே நேரம்தான். அதாவது ஒரு மணி! இரத்தின .நீ சொன்னது சரியே. ஆனாலும், இரு நண்பர்கள் பேசிக்கொண்டே நடக்கும் போது ஒரு மணி நேரம் ஆனதாகத் தெரியாது. அதைவிடக் குறைந்த நேரமே ஆனதுபோல் தோன்றும், இல்லையா?
மூவரும் : ஆமாம்! ஆமாம்!