இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7
பொன் : ஆமாம். கார்த்தியாயினி சரியாகச் சொல்லிவிட்டாள்...காந்தி திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அதில் அமிர்தசரசிலுள்ள ஜாலியன் வாலாபாக்கில் இந்தியர்களை வெள்ளைக்காரர்கள் ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக் கொன்றார்களே, அதில் சுமார் எத்தனை பேர் இறந்திருப்பார்கள்? எத்தனை பேர் காயம் அடைந்திருப்பார்கள்?
பழனி : 400 பேர் இறந்திருப்பார்களா?
ராஜாத்தி: சமீபத்தில் நான் ஒரு புத்தகத்தில் படித்தேன். 379 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், 1200 பேர் காயமடைந்ததாகவும் அதில் எழுதியிருந்தது.
பொன்: சபாஷ் ராஜாத்தி, படித்ததை நன்றாக நினைவில் வைத்திருக்கிறாயே!... சென்னையில் கிரிக்கெட் டெஸ்ட் பந்தயங்கள் நடக்கும் ஸ்டேடியத்தின் பெயர் தெரியுமா?