93
சரவணன்: 10 லட்சம் மக்களுக்கு மேல் இருந்தால் அந்த நகரத்தை மெட்ரோபாலிடன் சிட்டி என்கிறார்கள்.
அலமேலு : வெரிகுட் மிகவும் சரியாகச் சொன்னாய்...நம் தேசத்தில் ஐந்தாண்டுத் திட்டம் என்று ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கிறார்களே, இதை முதலில் துவக்கியது எந்த நாடு?
கிரி: அமெரிக்கா.
அலமேலு : இல்லை.
சரவணன் : ரஷ்யா.
அலமேலு : ஒஹோ! அமெரிக்கா இல்லை என்றால் ரஷ்யாவா? எப்படியோ சரியான விடையைச் சொல்லிவிட்டாய். ரஷ்யாவில் தான் 1928-ல் ஐந்தாண்டுத் திட்டம் துவங்கப் பெற்றது...சென்னை நகருக்கு வீராணம் என்ற ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டு வர ஒரு திட்டம் இருந்தது. அந்த ஏரி எங்கே இருக்கிறது?
ஜெயா : சிதம்பரத்துக்குப் பக்கத்திலே.
அலமேலு : ஆம், தென் ஆர்க்காட்டில் சிதம்பரம் வட்டத்திலே இருக்கிறது. இந்த ஏரி கடலைப் போல நீளமாகவும், விரிவாகவும் இருக்கும். தமிழ் நாட்டிலேயே மிகப் பெரிய ஏரி