பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

என்பதற்குச் சான்று வேண்டுமானால், சங்க காலத்திலே நடப்பட்ட நடுகற்களை (வீரகற்களைக்) கண்டுபிடிக்கவேண்டும். சங்க காலத்து நடுகற்கள் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட வில்லை. சங்க காலத்து நடுகற்கள் போரில் இறந்துபோன வீரர்களின் நினைவுக் குறியாக நடப்பட்டவை. அந்த நடு கற்களில் இறந்த வீரனுடைய பெயரையும் சிறப்பையும் எழுதியிருந்தபடியால், அந்த நடுகற்களைக் கண்டுபிடித்தால், அவற்றில் எழுதப்பட்ட எழுத்து பிராமி எழுத்தா அல்லது வேறு வகையான எழுத்தா என்பது விளங்கி விடும். ஆனால், அந்தக் காலத்து வீர கற்கள் இதுவரையில் ஒன்றேனும் கண்டுபிடிக்கப்படவில்லை.

கடைச் சங்க காலத்தில் எழுதப்பட்ட பிராமி எழுத்துகள் தமிழ்நாட்டு மலைக் குகைகளில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிற படியால், அக்காலத்து நடுகற்களிலும் பிராமி எழுத்துத் தானே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று சிலர் கருதக் கூடும். இப்போது தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழைய பிராமி எழுத்துகள், பௌத்த, சமண முனிவர்கள் தங்கித் தவஞ்செய்வதற்காக அமைக்கப்பட்ட மலைக் குகைகளிலே எழுதப்பட்டவை. ஆனால், பௌத்த சமணர் அல்லாத துறவிகள் மலைக் குகைகளில் தங்கித் தவஞ் செய்யவில்லை. பௌத்த சமணர்களுக்காக அமைக்கப்பட்ட மலைக் குகைகளிலே பிராமி எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கிறபடியால் இவ்வெழுத்துகளைப் பௌத்த மதத்தாரும் சமண மதத்தாரும் மட்டும் உபயோகித்திருக்க வேண்டும். பௌத்த சமண மதத்தாரல்லாத அரசர் முதலியோர் அக்குகைகளைத் தானஞ் செய்திருந்தாலும், அவை வடநாட்டு மதங்களைச் சார்ந்த பௌத்த சமணருக்காக அமைக்கப்பட்ட படியால் அவற்றில் பிராமி எழுத்தை எழுதியிருக்க வேண்டும். பௌத்த சமணரல்லாத ஏனைய மதத்தாரும் நாட்டு மக்களும் அக் காலத்தில் பிராமியல்லாத ஏதோ ஒரு பழைய தமிழ் எழுத்தை வழங்கி இருக்கக்கூடும். இதன் உண்மையை