பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

ஹொய்சள அரசர் காலத்திலும் எருமை என்னும் பெயர் இவ்வூருக்கு வழங்கப்பட்டிருந்த தென்பதை அவ்வரசர்களுடைய சாசன எழுத்திலும் காண்கிறோம். (Erumais Erumainadu of Tamil Literature and Erumainadu of the Hoysala Records. Epi. Car. Xc. w. 20.)

எருமையூர் என்னும் பெயர் பிற்காலத்திலே மைசூர் என்று வழங்கப்பட்டது. எருமை என்பதற்குச் சமஸ்கிருதச் சொல் மகிஷம் என்பது. எருமை ஊர் மகிஷ ஊர் என்றாகிப் பிறகு மைசூர் என்றாயிற்று. மைசூர் (எருமையூர்) என்னும் இவ்வூரின் பெயர் மிகமிகப் பிற்காலத்தில் கன்னட தேசம் முழுவதுக்கும் பெயராக மைசூர் என்று அமைந்துவிட்டது.


துவரை (துவார சமுத்திரம்)

இதுவும் இப்போதைய தெற்கு மைசூரில் இருக்கும் ஊர் இவ்வூர் இப்போது ஹளேபீடு என்று பெயர் பெற்று இருக்கிறது. (ஹளெ-பழைய, பீடு-வீடு. அதாவது, பழைய படைவீடு என்பது பொருள். படைவீடு-பாடிவீடு, பாசறை). இப்பொழுதும் துவரையில் துவார சமுத்திரம் என்னும் பெரிய ஏரி இருக்கின்றது. இங்கு அரையம் என்னும் ஊரில் இருங்கோவேள் அரச பரம்பரையார் இருந்து அரசாண்டார்கள். அந்த அரையம் என்னும் நகரம் சிற்றரையம், பேரரையம் என்று இரண்டு பிரிவாக இருந்தது. இருங்கோவேள் அரசர் புலிகடிமால் என்று பெயர் பெற்றிருந்தார். (இந்தப் புலிகடிமால் அரசராகிய இருங்கோவேள் அரசரின் சந்ததியார் பிற்காலத்தில் ஹொய்சளர் என்ற புதுப்பெயர் பெற்று சிறப்பாக அரசாண்டார்கள் என்று தோன்றுகின்றது.) பாரி வள்ளல் என்னும் அரசனுடைய பரம்பு நாட்டை மூவேந்தர் வென்று கொண்டபிறகு, பாரியின் மகளிராகிய அங்கவை